குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ)அறிவிக்கப்பட்ட காலம். அதுவரை வெளியில் வராத இஸ்லாமிய பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் முதல் ஒட்டுமொத்த சமுதாயமே மாதக்கணக்கில் தெருவில் கிடந்து போராடிக்கொண்டிருந்தது. ஆண்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என எத்தனை யெத்தனை நபர்கள் தங்களை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டு இரவு பகலாகக் களத்தில் நின்றனர். மாதக்கணக்கில் ஆயிரக் கணக்கான மக்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு சமூகத்திடம் தான் கையேந்தி நின்றோம். இயன்ற தைக் கொடுத்தார்கள். குழந்தைகள் தங்கள் பிஞ்சுக் காலிலிருந்த கொலு சைக்கூட கழற்றிக் கொடுத்தார்கள். சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் உண்டி யல் காசைக் கொடுத்தார்கள். ஒரு மூதாட்டி. பக்கத்து ஊரிலிருந்து தினமும் போராட்டத் திடலுக்கு காலை யில் வருவார். இரவுவரை திடலில் தங்கியிருந்து கடைசி பஸ்சுக்கு கிளம்பு வார். தினமும் வசூலில் தன்னால் இயன்ற தொகையைக் கொடுப்பார். ஒரு நாள் மாலை ஒருங்கி ணைப்புக்குழு நண்பர் கலாம் திடலில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற அந்த மூதாட்டி சொன்னார்: “ த்தா.. ஊர்ல எனக்கு சின்னதா ஒரு வீடு இருக்கு. அத அடமானம் வெச்சி கேட்டிருக்கேன். பணம் கிடைச்சதும் கொண்டு வந்து தர்றேன்” நண்பர் கலாம் பதறிவிட்டார். “அம்மா.. அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள். மக்கள் உதவுகிறார்கள். எப்படியும் சமாளித்து விடுவோம்..” அந்த பாட்டி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு போனதை பதைபதைப்போடு அவர் சொன்னதைக் கேட்டேன். பயம். என்ன நடக்குமோ..? இந்த அரசு நம்மை என்ன செய்யுமோ..? நம் பிள்ளைகளுக்கு என்ன நேருமோ..? நாம் அனாதைகளாக்கப்படுவோமோ? தலைமுறை தலைமுறையாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிலத்திலிருந்து விரட்டப்படுவோமோ..? என்றெல்லாம் நிலவிய அச்சம். இது அந்த பாட்டியின் அச்சம் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமூக மும் அப்படித்தான் அஞ்சிக்கிடந்தது. எங்கள் கண்ணியத்தைக் குறைத்துவிட அனுமதித்துவிடாதே அல்லாஹ்..! - என்ற துவா வசனங் களில் கண்ணீர்விட்ட எத்தனையோ நபர்களை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்
வரலாறு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நோக்கம் ஒன்று தான். பர்மாவிலிருந்து மணிப்பூர் வரை இதைப் பார்த்துக்கொண்டுதாம் இருக்கிறோம். இப்படி ஒரு சமூகத்தை இனப்படுகொலைக்கு நகர்த்துகிற வேலையை பாசிசக்கும்பல் திட்டமிட்டுச் செய்தபோது அதற்குத் துணைநின்றது இந்த அதிமுக கும்பல். நம் வீட்டுப் பிள்ளைகளின் உதிரம் குடிக்கும் சட்டத்துக்கு தன் கையெழுத்தின் மூலம் அனுமதிகொடுத்தது அதிமுக. இன்னும் அந்தக் கத்தி விலகிவிட வில்லை. நம் தலைக்கு மேல்தான் தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆர்எஸ்எஸ் பரிவாரம் தனது நூற்றாண்டுத் தருணத்தில் இந்த நாடு, இந்துநாடாக அறிவிக்க தருணம் பார்த்து நிற்கிறது. அதற்குத் தேவை யெல்லாம் கடைசியாக ஒரே ஒரு வெற்றி. ஒரே ஒரு கலவரம். ஒரே ஒரு இனப்படுகொலை. இதுதான் எதார்த்தம். இந்த தேர்தல், மற்ற தேர்தல் களைப்போல இந்தியாவை யார் ஆள்வது என்பதற்கான தேர்தலென்று அரசியலறிவில்லாத முட்டாள்தான் நம்புவார். இது இந்தியா என்கிற தேசம் இருக்குமா இருக்காதா என்பதை நிர்ண யிக்கிற தேர்தல். ஜனநாயகம், மனித உரிமை, மதச்சார்பின்மை, பாதுகாப்பு இதெல்லாம் நிலைக்குமா நீடிக்குமா என்கிற கேள்வியைத் தாங்கி நிற்கக் கூடிய தேர்தல். இதையும் கூட “பாசிசம் வந்துரும் ப்ரோ..”. என்று நக்கல் செய்பவர்களை வெறும் முட்டாள்களாக, அரசியலற்ற வர்களாக குறைத்து மதிப்பிட மாட்டேன். மாறாக அவர்கள் கருங்காலிகள். இனப்படுகொலைக்கு தங்களை அறியாமலே ஆதரவளிக்கக் கூடி யவர்கள்.
இந்த நிலையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு நிற்கிற சில இஸ்லாமிய நண்பர்களுக்கு உடல் கூசவில்லையா? உங்கள் அற்ப சுய நலனுக்காக மனிதப்பேரழிவுக்கு மறை முக ஆதரவாக நிற்பது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நீங்கள் செய்வது சமுதாயத்துக்கான துரோகம் அல்ல. மனிதகுலத்துக்கான துரோகம். கோடாரிகள், மரங்களை வெட்டு வதற்கு மரத்திடமிருந்தே காம்பைப் பெற்றுக் கொள்வதுபோல ஒரு சமூ கத்தின் பேரழிவிற்கு அந்தச் சமூகத்தி லிருந்தே புல்லுருவிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது காலம். நீங்கள் சமூகத்தையும் மக்களை யும் முட்டாள்களென்று நம்பலாம். ஆனால் மக்கள் உங்களுக்கும் சேர்த்தே தீர்ப்பெழுதுவார்கள். வரலாற்றின் குப்பைத்தொட்டியில் பாசிஸ்டுகளோடு உங்களையும் கட்டாயம் தூக்கி எறிவார்கள். இன்னும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. இன்னும் தாமதமாகிவிடவில்லை. மிகப்பெரிய அழிவுக்குத் திட்டமிட்டுக் காத்திருக்கும் பாசிஸ்டுகளை வீழ்த்த அதற்கு எதிராக அணிதிரள்வதை உறுதி செய்வோம். அற்ப சுயநலக்கும்பலைப் புறக்கணிப்போம்.
‘சிந்திப்போர்க்கு தெளிவான அத்தாட்சியுண்டு.’
- அல் குர் ஆன் -
- சம்சுதீன் ஹீரா, திருப்பூர்