தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக-வைச் சேர்ந்த, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணன், தன் ட்விட்டர் பக்கத்தில், “தன் இதயங்கனிந்த நன்றிகளை” ராஷ்ட்ரபதிஜி-க்கு மட்டுமல்ல, “தங்களுடைய அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பிரதமர் மோடிஜிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாஜிக்கும்” தான் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்காக நன்றியைத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு இவர் அடிமைப்புத்தியுடன் நன்றிதெரிவித்திருக்கும் விதத்திலிருந்தே, ஆளுநராக அவர் நடத்தை எப்படி இருக்கப் போகிறது என்பதைக் கணித்திட முடியும்.
குடியரசுத் தலைவரால் சமீபத்தில் ஆறு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது, மோடி அரசாங்கத்தால் ஆளுநர் பதவி என்பது எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும், அது எப்படியெல்லாம் இழிந்தமுறையில் துஷ்பிரயோ கம் செய்யப்படுகிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
அருவருப்பும் அதிர்ச்சியுமான உதாரணம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.அப்துல் நசீர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார். அவரை, மோடி அரசாங்கம் ஆந்திரப்பிரதேச ஆளுநராக நியமனம் செய்தி ருப்பது, மோடி அரசாங்கம் எவ்விதவேலையுமின்றி சம்பளம் மட்டும் பெறும் பதவியை எப்படியெல்லாம் பயன்படுத்தும் என்பதற்கு அருவருப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் ஓர் உதாரணமாகும். நீதிபதி அப்துல் நசீர் என்பவர், 2019ஆம் ஆண்டில் அயோத்தி தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக ஒருமனதாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வாயத்தில் அமர்ந்திருந்த நீதிபதிகளில் ஒருவர் என்பது இங்கே நினைவு கூரத்தக்கதாகும். எனவேதான் இந்த நியமனம் என்பது அதற்கு அர சாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள ஒரு கைமாறாகவே விரிவான முறையில் பலராலும் கருதப்படுகிறது. நீதிபதிகளை ஆளுநர்களாக நியமனம் செய்வதில் மோடி அரசாங்கம் இரண்டகமான பதிவுகளைப் பெற்றிருக்கிறது. இதற்கு முன் 2014இல் நீதிபதி பி.சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமனம் செய்தது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆளுநராக நியமனம் செய்தது அதுவே முதல் தடவை. இந்த நடவடிக்கையானது, ஓய்வுபெற்ற நீதிபதிகளாலும் நடுவர்க ளாலும் விரிவான அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனை நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தல் என்று அவர்கள் பார்த்தார்கள்.
அனைவரும் விசுவாசிகளே
இதர நான்கு நியமனங்களும் ஆர்எஸ்எஸ்/பாஜக வம்சாவளி யைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக அவர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் விசுவாசிகள் என்னும் ஒரே தகுதியைப் பெற்றவர்களேயாவர். அவர்கள் தங்க ளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுநர் பதவியில் எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதை ஆளும் கட்சிக்கு அவர்கள் காட்டும் எஜமான விசுவாசமே தீர்மானித்திடும். இவ்வாறு நியமனம் செய்யப்பட்டிருக்கும் நபர்களில் ஒருவர், தான் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு, ஆளும் கட்சியின் தலைவர்க ளுக்கு அடிமைப்புத்தியுடன் நன்றியைத் தெரிவித்திருக்கும் விதமே வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சி.பி.ராதா கிருஷ்ணன், தன் ட்விட்டர் பக்கத்தில், “தன் இதயங்கனிந்த நன்றி களை” ராஷ்ட்ரபதிஜி-க்கு மட்டுமல்ல, “தங்களுடைய அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பிரதமர் மோடிஜிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாஜிக்கும்” தான் ஜார்க்கண்ட் ஆளு நராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்காக நன்றியைத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு இவர் அடிமைப்புத்தியுடன் நன்றி தெரிவித்திருக்கும் விதத்திலிருந்தே, ஆளுநராக அவர் நடத்தை எப்படி இருக்கப் போகிறது என்பதைக் கணித்திட முடியும்.
ஆளும் கட்சியின் முகவர்களாக அரசியல் அடியாட்களாக
நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் சுயம்சேவக்குகளிலிருந்தும், மற்றும் அரசாங்கத்தில் தங்களுக்கு விசுவாசமாக இருந்து, தங்கள் சொல்படி செயல்பட்டு பின் ஓய்வுபெற்றுள்ள அதிகாரவர்க்கத்தினர் மற்றும் இதர ஆட்களையும்தான் இவ்வாறு தேர்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் பாஜக அல்லாத மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் அனைவருமே ஆளும் கட்சியின் முகவர்களாக, அல்லது, மிகமோச மான அரசியல் அடியாட்களாகச் செயல்பட்டுவருவதைக் காட்டி இருக்கின்றன. இந்த ஆளுநர்கள் அனைவருமே அரசமைப்புச்சட்டத்தின் நெறி முறைகள் அனைத்தையும் காலில்போட்டு மிதித்துக்கொண்டிருப்ப தோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், மேற்பார்வையிடுவதுமான வேலைகளில் திமிர்த்தனமாக ஈடுபட்டும் வருகிறார்கள்.
பஞ்சாபிலும்...
இத்தகைய திமிர்பிடித்த அடாவடித்தனமான போக்கிற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, பஞ்சாப் ஆளுநராக இருந்திடும் பன்வாரி லால் புரோகித், முதலமைச்சர் பகவந்த் மானிடம், வெளிநாடுக ளுக்குச் சென்று பயிற்சி பெற்றுவந்தவர்களை பள்ளிக்கூட முதல்வர்க ளாகத் தெரிவு செய்திருப்பதைக் கேள்வி கேட்டிருப்பதும் மற்றும் மாநில அரசாங்கத்தின் இதுபோன்ற பல்வேறு முடிவுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதுமாகும்.
தொடரும் துஷ்பிரயோகங்கள்
மாநில சட்டமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்காகத் தன்னிடம் அளிக்கப்பட்ட உரையில் மிக முக்கியமான பகுதிகளை வேண்டு மென்றே படிக்காமல் மறுத்து தாவிச் சென்றது, மூத்த அதிகாரிகளை அழைத்து அவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிப்பது, மாநிலத்தில் ஆளும் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை பொதுவெளியில் விமர்சனம் செய்வது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு இசைவளிக்க மறுப்பது – இவ்வாறு பாஜக-வி னால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் தங்கள் அலங்கார மான ஆளுநர் பதவியைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கத்தின் தூண்டுதலுடன் மேற்கொள்ளப்படும் ஆளுநர்களின் இத்தகைய அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் எனக் கோரிட, பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும். இம்மாநிலங்களில் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்திடவும், ஆளுநர்களின் அடாவடித்தனமான நடவடிக்கை களுக்கு எதிராகவும் மக்கள் அணிதிரட்டிப் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்.
பிப்ரவரி 15, 2023,
தமிழில்: ச.வீரமணி