டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அப்போது டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. இதையடுத்து குறுவை தொகுப்பு திட்டத்தையும் அரசு அறி வித்தது. உற்சாகமடைந்த டெல்டா விவசா யிகள் 5 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை தொடங்கினர். ஆனால் எதிர்பார்த்தபடி மேட்டூர் அணை க்கு நீர்வரத்து இதுவரை இல்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் வந்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது. அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் வந்தால் அணையில் இருந்து தண்ணீரை திறக்க இயலாத நிலை ஏற் பட்டுவிடும். இதனால் டெல்டா மாவட்டங்க ளில் குறுவை சாகுபடி நடந்து வரும் 5 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் தண்ணீ ரின்றி கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உரு வாகியுள்ளது. டெல்டாவில் 3 நிலையாக விவசாயிகள் செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. குறிப்பாக இதில் முதல் நிலை என்பது வயலை உழுது விதை விதைத்த வகையில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இரண்டாவது நிலை யில் விவசாயிகள் உழுது, விதை விதைத்து களைக்கொல்லி அடித்து ஏக்க ருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ளனர். மூன்றாவது நிலையில் விவசாயிகள் நிலத்தை உழுது, விதை விதைத்து களைக்கொல்லி அடித்து மற்றும் மேலு ரம் இட்டு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் குறுவை சாகுபடியை தொடரலாமா? இன்னும் செலவு செய்தால் பயிரை காப்பாற்ற முடியுமா? என்ற சந்தே கத்தில் விவசாயிகள் உள்ளனர். கர்நாடகா ஜுன், ஜுலை மாதங்களில் தர வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக தந்தால் தான் குறுவை சாகுபடி பிழைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். திருவாரூரில் குறுவை நேரடி நெல் விதைப்பில் 29 ஆயிரத்து 7 ஏக்கர், திருந்திய நெல் சாகுபடியில் 47 ஆயிரத்து 943 ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரி வித்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைந்து முளைவிட்ட பயிர்கள் வெயிலில் கருகி வருகின்றன. விதைத்த வயலில் நெல்மணி கள் முளையிலேயே முடங்கிவிட்டன. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் குறுவைக்கு தண்ணீர் கேட்டு ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் தண்ணீர் முறையாக பாசன வயலை சென்றடையவில்லை. இதைய டுத்து நீர் நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் மோட்டார் மூலமாக இறைத்து வயலில் பாய்ச்சி வருகின்றனர். சம்பா சாகுபடிக்காவது உரிய நீரை பெறுவதற்கு தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முறைவைத்து தண்ணீர் விடுவதால் கடைமடை பகுதி விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் தண்ணீர் இல்லாத தால் களையெடுக்க முடியாமலும் களைக்கொல்லி மருந்து அடித்த விவசா யிகள் தண்ணீர் பாய்ச்சி உரம் இட முடியா மலும் கடும் அவதிப்படுகின்றனர். முன் பகுதியில் உள்ள விவசாயிகள் ஓரளவு சிரமம் இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச முடிகிறது.
ஆனால் பெரும்பாலான கடைமடை பகுதி விவசாயிகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பல பகுதிகளில் பயிர்கள் தண்ணீர் இல்லா மல் சிவக்க ஆரம்பித்துவிட்டன. இப்போது 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 லட்சம் ஏக்கரில் உள்ள பயிர்களை நிலத்தடி நீர் மூலம் காப்பாற்றி விடலாம். ஆனால் 3.5 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலமே காப்பாற்ற முடியும். அதுதான் இந்த பயிர்களுக்கு உயிர் தண்ணீர். அதுமட்டுமல்ல, ஆகஸ்டு 1-ஆம்தேதி முதல் இதுதவிர 8 லட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி தொடங்கப்பட வேண்டும். அதுவும் கேள்விக்குறியாகி விட்டது என்கின்றனர் விவசாயிகள். கர்நாடக அரசு காவிரியில் ஜூலை 22-ஆம் தேதி வரை 33.31 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 4 டி.எம்.சி.க்கும் குறைவான தண்ணீரே கர்நாடகத்தால் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசாங்கம் உரிய தண்ணீரை திறந்துவிட ஒன்றிய அரசாங்கம் உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, தில்லியில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கி னார். இப்போது, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மழையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் குடிநீர் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கூறி யிருந்தது சற்று ஆறுதல் அளித்தது. இப்போது கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. விரைவில், மேட்டூருக்கு தண்ணீர் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடர்பாட்டுகால பங்கீட்டு கொள்கையின்படி, தமிழ்நாட்டு க்கு தண்ணீர் திறக்கக்கோரி உத்தரவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பது விவசாயி களின் கோரிக்கையாக இருக்கிறது.