states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இடைநீக்கம்

வேலூர் அரசு மருத்துவமனை யில் குழந்தை கடத்தப் பட்டபோது கவனக்குறை வாக இருந்ததால் 5 தற்காலிக பணியா ளர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  


கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும்

தூத்துக்குடி காயாமொழி கிராமத்தில் ஊர்காத்த சாமி கோயில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு  எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்களன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள்; கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மதநல்லிணக்கம் தான் ஏற்படும். தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன  பிரச்சனை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அனை வருக்கும் அனைத்து உரிமையும் உண்டு; எனவே கோயில் அருகே தேவாலயம் கட்டலாம் என்று நீதிபதிகள்  கருத்து தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

11 மாவட்டங்களில்  இன்று கனமழை வாய்ப்பு

தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு,  சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்  ணகிரி, திருப்பத்தூர், பெரம்ப லூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை  ஆகிய 11 மாவட்டங்களில் செவ்வா யன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உண்டு, உறைவிட காப்பகங்கள் திறக்கப்படும்’

வயது முதிர்ந்த மக்களுக்காக 3 கோயில்கள் சார்பில் உண்டு, உறைவிட காப்பகங்கள்  திறக்கப்படும் என இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரி வித்துள்ளார். மேலும் திமுகவை சாடிய  எடப்பாடி பழனிசாமிக்கு, செஞ்சி கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாக்கள் அல்ல என பதிலடி  கொடுத்துள்ளார்.

நாகை மீனவர்கள்  10 பேர் விடுதலை

நாகை மாவட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து ஆக.7 அன்று  மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் 10 மீனவர்கள் மீன்  பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பட கில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும் ஆக.21 அன்று வரை திரு கோணமலை சிறையில் அடைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இந்நிலையில், சிறைக்  காவல் முடிந்து திங்களன்று இலங்கை  திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்  முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 10 மீன வர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 10 மீனவர்களும் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். 

டி.டி.வி.தினகரன் ‘ஸ்மார்ட் மின் மீட்டருக்கு மீண்டும் டெண்டர்’

தமிழ்நாட்டில் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஏற்கனவே சென்னை மாநக ரில் 1 லட்சத்து 42 ஆயிர இணைப்புகளில்  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த செயல்பாடுகள் அடிப்ப டையில் அனைத்து இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே கட்டமாக ரூ.3.30 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்  கொள்முதல் செய்வதற்கு மின்சார வாரி யம் புதிய டெண்டர் கோரியுள்ளது. 

‘துரோக தமிழர்’
மதுரையில் நடைபெற்றது அதிமுக எழுச்சி மாநாடு அல்ல; அது எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. இந்த மாநாட்டுக்காக அவர்  இவ்வளவு செலவு செய்திருந்தாலும், அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் மட்டுமே  பங்கேற்றனர். 25 லட்சம் பேர் பங்கேற்ற தாகக் கூறுவது பொய்யான தகவல். அவருக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற பட்டம்  கொடுத்திருப்பது புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். ‘துரோகத் தமிழர்’ என்ற  பட்டம் வேண்டுமானால் கொடுத்தி ருக்கலாம். 

‘பூனைக்குட்டி’

“தமிழ்நாட்டு மக்கள் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால் தான் எப்படிப்பட்டவர் என்பதை யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததன் மூலம் காட்டிவிட்டார். பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது; இப்படிப்பட்டவர்கள் தான் கருத்து உருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள்; இது போன்றவர்களிடமிருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்’’.

நடிகர் யோகிபாபு மீது காவல்நிலையத்தில் புகார்

புகார் சென்னை, ஆக.21- முன்பணம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்க வராமல் நடிகர் யோகி பாபு இழுத்தடிப்பதாக காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஆசீர்(48), இவர் விருகம்பாக்கத்தில் சினிமா நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவர் ஞாயிறன்று விருகம்பாக் கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் சினிமா தயாரிப்பு நிறுவ னம் நடத்தி வருவதாகவும், ஜாக் டேனியல் என்ற படத்தில் நடிக்க நடிகர்  யோகி பாபுவுக்கு சம்பளம்  ரூ.65 லட்சம் பேசிய நிலையில் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட நடிகர் யோகி பாபு நடிக்க வரா மலும், பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஆக.21- சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரி யாத மர்ம நபர் ஒருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடி குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித் துள்ளார்.  இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமான சூழல் ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே காவலர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் மூலம்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த  மணிகண்டன் என்பவரை கைது  செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப் பட்ட அவர் ஏற்கெனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவ படிப்பு: 1670 இடங்களுக்கு 2 ஆவது கட்ட கலந்தாய்வு 

சென்னை, ஆக.21- தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. முதல் சுற்று கலந்தாய்வுக்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ்., 767 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 1670 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் இணையதளங்களில் ஆக.22 அன்று மாலை 5 மணி வரை பதிவு  செய்யலாம்.  24 ஆம் தேதி காலை 10 மணி முதல் 28 ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வருகிற 29, 30 ஆம் தேதிகளில் தர வரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி இடங்கள் குறித்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப்ப டும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்  4 ஆம் தேதி மாலை 5 மணி வரை  கல்லூரிகளில் சேர்வதற்கு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் முத்துச்செல்வன் தெரிவித்தார்.

தங்கம் விலை அதிகரிப்பு

சென்னை, ஆக.21- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத் தின் விலை சில தினங்க ளாக அடிக்கடி குறைந்து வந்தது. ஆடி மாதம் முடிந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு  கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,455க்கு விற்பனை ஆகி றது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் தற்போது அதிகரித்து வருகிறது.