பிஎஸ்என்எல் மொபைல் டவர்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொன்தமான 14,917 மொபைல் டவர்களை, தேசிய பணமதிப்பாக்கும் திட்டத்தின் (National Monetisation Pipeline)கீழ், தனியாரிடம் ஒப்படைத்திட முடிவு செய்திருப்பதற்கு எதிராக வியாழக்கிழமை (28.7.2022) மதிய உணவு இடைவேளையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துமாறு பிஎஸ்என்எல் அனைத்து யூனியன்கள் மற்றும் சங்கங்கள் (AUAB- All Unions and Associations of BSNL) அறைகூவல் விடுத்துள்ளது. உடனடியாக பிஎஸ்என்எல் சார்பில் 4ஜி சேவையைத் துவக்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.