ஜம்மு, மார்ச் 17 - எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து ஒடுக்குவதில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் நிலைமையும் ஒரே மாதிரிதான் உள்ளது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் (PDP) தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவா் இம்ரான் கானை கைது செய்ய காவல் துறை யினா் முயற்சித்ததற்கு எதிராக அவரின் ஆதர வாளர்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த இரு நாள்களாக லாகூரில் தீவைப்பு, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் ஜம்மு-வில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மெகபூபா முப்தி தனது தொண்டா்கள் மத்தியில் பேசியிருப்ப தாவது: ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்கள் வேதனை அளிக்கின்றன. இந்தியாவிலும், பாகிஸ்தா னிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து வருகிறது.
ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா சிறை யில் உள்ளார். தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், சிவசேனா தலைவா்கள் என பலரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார். இஸ்லாமியரான மெகபூபா அண்மையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேக பூஜை நடத்தினார். இதுதொ டர்பாக பாஜக-வினர் சா்ச்சையைக் கிளப்பியி ருக்கும் நிலையில், அதற்கும் மெகபூபா முப்தி பதிலளித்துள்ளார். அதில், “நாம் மதச்சார்பற்ற நாட்டில் வசித்து வருகிறோம். பல்வேறு கலாச்சாரங்களை நமது நாடு உள்ளடக்கியது. அந்த சிவன் கோயில் பிடிபி கட்சியின் மூத்த தலைவா் மறைந்த யஷ்பால் சா்மாவால் கட்டப் ்பட்டது. அவரது மகன் அழைப்பின் பேரில் அந்தக் கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஒருவா் மிகுந்த நம்பிக்கை, பக்தியுடன் அபிஷேகம் செய்ய பாத்திரத்தில் தண்ணீா் தந்தார். அவரை புண்படுத்தக் கூடாது என்று சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்தேன்” என்றும் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.