states

img

சர்வதேச போர் விதிகளை மீறும் இஸ்ரேல்

காசா,அக்.20-  காசா மீது போர் அறிவித்ததில் இருந்து இஸ்ரேல் ராணுவம் சர்வதேச போர் விதி முறைகளை மீறி பொது மக்கள் மீது தாக்கு தல் நடத்தி வருகிறது. வியாழக்கிழமை யன்று காசாவில் உள்ள செயிண்ட் போர் பிரியஸ் என்ற தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி  பாலஸ்தீனர்கள் மீது, போர் விதிமுறைகளை மீறி இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியுள்ளது . கடந்த 13 நாள் போரில் 11,000 வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை  இஸ்ரேல்  குண்டு வீசி அழித்துள்ளது என்றும்  92 ஆயிரம் (5 சதவீதம்)  மக்களுக்கு தற்போது வீடு இல்லை என்றும் ஹமாஸின் கட்டுப் பாட்டில் உள்ள சுகாதார  அமைச்சகம் தெரி வித்துள்ளது. இவ்வாறு வீடுகளை இழந்த மக்கள் தங்கள் உயிரை பாதுகாக்க மசூதிகள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்துள்ள னர். அவ்வாறு 400 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் போர் விதிமுறைகளை மீறி அந்த தேவாலயம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் அந்த தேவாலயம் தரைமட்டமாகியுள்ளதோடு தரைத் தளத்தில் இருந்த பெரும்பான்மையான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரி வித்துள்ளனர்.மேலும் 1,150 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பல ஆண்டு களாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்க ளுக்கும் பாதுகாப்பான இடமாக இருந்து வந்துள்ளது எனவும் காசா மக்கள்  கூறியுள்ளனர். மேலும் இஸ்ரேல் தாக்குதலால் இது வரை 3,800 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்ச கம் குறிப்பிட்டுள்ளது.