புதுதில்லி, ஜூலை 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலக்குழு அலுவலகம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் தொடுக் கப்பட்டிருப்பதற்கு, அரசியல் தலை மைக்குழு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 30 வியாழனன்று இரவு திரு வனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநி லக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. மையத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துக் கொள்கிறது. மாநில அரசாங்கம் இதுகுறித்து முழுமையாகப் புலன் விசாரணை மேற் கொண்டு கயவர்களைத் தண்டித் திடும் என நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். கோழைத்தனமான இத்தாக்கு தலைக் கண்டித்திட அனைத்து ஜன நாயக சக்திகளும் முன்வரவேண்டும் என்றும், எவ்விதமான ஆத்திர மூட் டல் நடவடிக்கைக்கும் இரையாகி விடாமல் அமைதியான முறையில் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அனைத்து ஜன நாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.