states

img

வங்கத்தில் அம்பலமாகி நிற்கும் பாஜக-திரிணாமுல் கூட்டு

கொல்கத்தா, ஜூலை 25- “வேலை கொடு..” இது எழுதப்  பட்ட பதாகையோடு, நான்கு பேர்  திடீரென்று எழுந்து முழக்கமிட்ட போது திரட்டப்பட்டிருந்த கூட்டம் அதிர்ந்தே போனது. மேற்கு வங்கத்  தில் மாநில அரசு ஊழியர் ஆவதற் கான தேர்வில் தகுதி பெற்றும், பணி நியமனம் கிடைக்காதவர்களில் இந்த நான்கு பேரும் அடங்குவர். மேற்குவங்க முதல்வர் மம்தா  பானர்ஜிக்கு கூடுதல் அதிர்ச்சி. தன் முகத்திற்கு எதிரே இப்படியெல் லாம் ஜனநாயகக் குரல்கள் எழு வதை எப்போதுமே விரும்பாத அவர், அதே கூட்டத்திலேயே இவர்  களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மேலும் அம்  பலமானார். “நான் இவர்களை நியமிக் கவே விரும்புகிறேன். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யாவும்தான் நீதிமன் றத்தை நாடி முட்டுக்கட்டை போடு கிறார்கள்.

அவர்களுக்கு முன் னால் போய் முழங்குங்கள்” என்  றார். தகுதி பெற்றும், வேலை கிடைக்காதவர்கள்தான் வழக்கு  போட்டிருக்கிறார்கள் என்பதை யும், அவர்கள் சார்பில்தான் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா வாதாடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் வசதியாக மறந்துவிட்டார். கோடிக்கணக்கில் லஞ்சம்  பெறப்பட்டதால்தான் தகுதியான வர்களுக்கு வேலையைத் தர வில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தகுதி பெற்ற  தேர்வர்களின் குற்றச்சாட்டு நிரூ பணம் ஆகியுள்ளது. சில நாட்க ளுக்கு முன்பாக, நடிகையும், அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில்  இருந்து கோடி, கோடியாகப் பணக்கட்டுகள் கைப்பற்றப்பட் டன. இது பணி நியமனத்திற்காக பெறப்பட்ட லஞ்சப்பணம் என்று கூறப்படுகிறது. 

மாநிலம் முழுவதும் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்  திய மாணவர் சங்கமும் போராட் டங்களை நடத்தியுள்ளன. ரயில் களில் ஏறி, பயணிகள் மத்தியில் சோதனை, பணம் சிக்கியது மற் றும் பார்த்தா சட்டர்ஜி கைது ஆகி யவற்றை அறிவிக்கும் வித்தியாச மான போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் மேற்கொண்டது. அண்மையில் சில விருதுகளை மேற்கு வங்க அரசு அறிவித்தது. அந்த விருதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நோபல் பரிசு  பெற்ற அபிஜித் பானர்ஜி போன்ற வர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் சுஜன் சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக இரட்டை வேடம்

பணம் கைப்பற்றப்பட்டவுடன், திடீரென்று பாஜக தலைவர்கள்  புதுதில்லியில் செய்தியாளர் களைச் சந்திக்கிறார்கள். இந்த பணம் கைப்பற்றப்பட்டதற்கு அம லாக்கத்துறைதான் காரணம் என்று கூறி தட்டிக் கொடுத்துக் கொள்கி றார்கள். மேற்கு வங்கத்தில் போராட்டங்களை நடத்தப்போவ தாக அறிவிக்கிறார்கள். ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று, நேற்று தங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. ஆனால், பணம்  கைப்பற்றப்பட்டவுடன் திடீரென்று  களத்தில் பாஜகவினர் குதிக்கி றார்கள். எந்தவித பங்களிப்பும் செலுத் தாத பாஜக, அரசியல் ரீதியான  லாபத்தை எடுக்கப் பார்க்கிறது என்று தேர்வர்களின் வழக்கறிஞ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப் பினருமான பிகாஸ் ரஞ்சன் பட் டாச்சார்யா கூறியுள்ளார். இது  பற்றி மேலும் பேசிய அவர், பாஜக வுக்கும், திரிணாமுலுக்கும் இடை யில் புரிதல் இருப்பது எல்லாருக் கும் தெரிந்த ஒன்றாகும். அதனால்  தான் நாரதா மற்றும் சாரதா விவ காரங்களில் எந்தவித நடவடிக்கை யையும் மத்திய புலனாய்வுத்துறை எடுக்கவில்லை.  ஆனால், இந்த முறை நட வடிக்கைகள் எடுக்கப்படுவதற் கான காரணம் பாஜக அல்ல. வழக்கு போட்டிருப்பது பாதிக்கப்பட்ட தேர் வர்கள் மற்றும் அதில் நீதிமன்றத்தி லும், வீதிகளிலும் போராடிக் கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். இந்த அரசு ஊழியர் தேர்வாணைய ஊழலை கொல்கத்தா நீதிமன்றம் கண்காணிப்பதுதான் இந்த சோத னைகளும், பணம் கைப்பற்றப் பட்டிருப்பதற்கும் காரணமாகும் என்று குறிப்பிட்டார். ஒருவேளை இந்த வழக்கையும் சிபிஐ நடத்தி யிருந்தால் பாஜக தலையீட்டால், இவ்வளவு முன்னேற்றம் கூட  இருந்திருக்காது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் கூறுகின்றனர்.