பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபல மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் “நியூநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் (பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு)” பச்சிளம் குழந்தைகள் அனும திக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தப் பிரிவில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்துக் குதறியுள்ளது. இதைத் தொ டர்ந்து அந்தக் குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளன. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கண்டன குரல் கிளம்பியுள்ளன. எலி கடித்து 2 குழந்தைகள் உயிரி ழந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது விபத்து அல்ல; அப்பட்டமான கொலையே. இந்த சம்பவம் கொடூரமான மற்றும் மனிதாபி மானமற்றது. இதனைக் கேட்டதும் உடலெல்லாம் நடுங்குகிறது. தனது அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தால், ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகள், இனி ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவமனைகளாக இல்லை; அது பணக்காரர்களுக்கு மட்டுமே. பிரதமர் மோடியும், மத்தியப்பிரதேச முதலமைச்சரும் (மோகன் யாதவ்) வெட்கித் தலைகுனிய வேண்டும். நாட்டி லுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துள்ள நிலையில், தற்போது தாய் மார்களின் மடியில் இருந்து குழந்தை களும் பறிக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே, இன்று அரசின் அலட்சி யத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக் கான பெற்றோர்களின் சார்பாக இந்தக் குரல் எழுப்பப்படுகிறது. உங்கள் பதில் என்ன? இந்தப் போராட்டமானது, ஒவ்வொரு ஏழைக்கும் ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு குழந்தை யின் உரிமைகளுக்கானது” என அவர் தெரிவித்துள்ளார்.