states

img

உதவித்தொகைக்காக காத்திருக்கும் ‘புரு’ மக்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. இம்மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் இனக்கலவரங்களால் மிசோர மிலிருந்து வெளியேறி திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் 2000-க்கும்  மேற் பட்ட புரு இன குடும்பங்கள் குடியமர்த்தப்  பட்டனர். ஒப்பந்தத்தின் ஒரு  பகுதியாக மறுவாழ்வு பெற்ற புரு குடும்பங்களுக்கு கடந்த ஓராண்டாக மாதாந்திர உத வித்தொகை வழங்கப்படவில்லை என்றும்,  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் கடிதம் எழுதியும் எவ்வித பலனில்லை என புரு குடியேற்றவாசி களின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசு வழங்கவில்லை இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில், “புரு குடும்பங்களுக்கு உதவித் தொகை ஒன்றிய அரசால் வழங்கப்படு கிறது. மாநில அரசு வழங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் காரண மாக தற்போது வழங்க வாய்ப்பில்லை. மேலும் தாமதம் ஏற்படலாம்” என அவர் கூறினார்.