states

img

கொல்கத்தா மாநகராட்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாஜக

கொல்கத்தா, டிச.22- கொல்கத்தா மாநகராட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.19) நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் முகவர்களை விரட்டியடித்தும் வாக்குச் சாவடிகளை கைப்பற்றியும், பரவலான வன்முறை மூலம் இந்த வெற்றியை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது. அது மொத்தம் உள்ள 144 வார்டுகளில் 134 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளது. இடது முன் னணி மற்றும் காங்கிரஸ் தலா 2 வார்டு களிலும், பாஜக மற்றும் சுயேச்சைகள் தலா 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளனர். இதனிடையே, இந்தத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது முன்னணி, சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு களைக் காட்டிலும் 2 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று,

பாஜக-வை மூன்றாவது இடத்திற்கு தள்ளியிருக் கிறது. திரிணாமுல் கட்சியின் தாக்குதல் களை எதிர்கொண்டபோதிலும், கொல்கத்தா மாநகராட்சிப் பகுதியில் இடது முன்னணியின் வாக்கு சதவிகி தம் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களு டன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மாந கராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடது முன்னணி 5.1 சதவிகித வாக்கு களைப் பெற்றது. தற்போது அது 13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இடது முன்னணி மொத்தம் 128 வார்டுகளில் போட்டியிட்டு 68 வார்டுகளில் இரண் டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், பாஜகவின் வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. 144 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 42 வார்டுகளில் மட்டும் இரண்டாவது  இடத்தில் வந்துள்ளது. அதன் வாக்கு கள் 28 சதவிகிதத்தில் இருந்து எட்டு சதவிகிதமாக குறைந்துள்ளது.  அனைத்து வார்டுகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் நான்கு சத விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.