states

img

ஜிக்னேஷ் மேவானியை சந்தித்த அசாம் சிபிஎம் தலைவர்கள்!

அகமதாபாத், ஏப். 21 - தலித் இளம் தலைவரும், குஜராத் மாநிலம் வட்காம் சட்டமன்றத் தொகுதியின் சுயேட்சை உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி, அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் ஒன்றில் ஜிக்னேஷ் தங்கியிருந்த போது, புதன்கிழமை நள்ளிரவு அவசர அவசர மாக போலீசார் அவரைக் கைது செய்து, அசாம் மாநிலத்திற்கும் அழைத்துச் சென்றனர். மேவானி மீது, அசாமின் கோக்ரஜ்கார் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கும் பதிவு செய்தனர். ஏப்ரல் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கா கவே ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீ சார் கைது செய்துள்ளதாக மேவானியின் வழக் கறிஞர் ஆனந்த் யாக்னிக்தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜிக்னேஷ் மேவானியை, அசாம் சட்டமன்ற உறுப்பினர் மனோ ரஞ்சன் தாலுக்தார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்திக்க முயன்றனர். ஆனால், அசாம் பாஜக காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதை யடுத்து, ஜிக்னேஷ் மேவானியைச் சந்திக்கா மல் செல்ல மாட்டோம் என்று, மனோ ரஞ்சன் தாலுக்தார் எம்எல்ஏ காவல்நிலையம் முன்பா கவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து, மனோ ரஞ்சன் தாலுக் தார் எம்எல்ஏ உள்ளிட்ட சிபிஎம் தலைவர் கள், ஜிக்னேஷ் மேவானியை சந்திக்க கோக்ரஜ் கார் காவல்துறையினர் அனுமதியளித்த னர். ‘அடக்குமுறையை நிறுத்து; ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்!’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.