states

img

ஹிஜாப் விவகாரத்தைக் கிளப்பிய 6 மாணவிகளும் பயங்கரவாதிகள்!

பெங்களூரு, மார்ச் 18 - ஹிஜாப் உரிமைக்கான போராட்ட த்தைத் துவங்கிய மாணவிகள் 6  பேரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று, பாஜக-வின் ஒபிசி பிரிவு பொதுச்செயலாளரும், உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ. கல்லூரி துணைத்தலைவருமான யஷ் பால் சுவர்ணா கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத் திற்குச் சென்ற 6 பேரும் நான் முன்பே கூறியது போன்று மாணவிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாத அமைப் பின் உறுப்பினர்கள். 3 நீதிபதிகளுக்கு எதிராக அவர்கள் அறிக்கை வெளியிட்ட விதம், அவர்கள் பயங்கரவாத அமைப்பி னை சேர்ந்தவர்கள் என நிரூபித்து உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு பயங்கரவாத அமைப்பு, ஊடகங்களிடம் என்ன கூற வேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி தொடர்புடைய அமைப்புகளை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவோர், இங்கே வாழவோ அல்லது பணியாற்றவோ அனுமதிக்கக் கூடாது. அவர்களது (மத) நம்பிக்கை யை வளர்க்கக் கூடிய நாட்டுக்கு அவர்கள் செல்லட்டும். மற்ற ஏழை மாணவ -மாணவிகளை அவர்கள் இடையூறு செய்யக் கூடாது. இந்த 6 பேருக்கும் (மாணவிகள்), படிக்கவோ, தேர்வு எழுதவோ விருப்பம் இல்லை. அவர்களுக்கு கல்வி கொள்கையை அழிப்பதும் மற்றும் பிற மாணவர்களை தொந்த ரவு செய்வதுமே நோக்கம்.” இவ்வாறு யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார்.