https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
பாஜக மாடல் ஜனநாயகம்
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களை குஜராத்திலும், அசா மிலும் உள்ள விலை உயர்ந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார்கள். மும்பையிலிருந்து நாட்டின் மற்றொரு முனையில் உள்ள கவுகாத்திக்கு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டி ருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த கடத்தல் களுக்காக மத்திய ஏஜெண்சிகள் முற்றிலும் தவறாக பயன்படுத் தப்பட்டுள்ளன. இவர்கள் ஜனநாயகத்தையே கடத்திச் சென்று விட்டார்கள்.
இதுதான் பாஜக மாடல் ஜனநாயகம். இதற்காக இந்தியா பெரும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மும்பையிலிருந்து இப்படி கடத்திச் செல்லப்பட்ட சிவசேனா எம்எல்ஏக்களில் ஒருவர் கைலாஷ் பாட்டீல். உஸ்மானாபாத் தொகுதி எம்எல்ஏ இவர். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜ ராத்தில் உள்ள சூரத்திற்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட போது வழியில் குஜராத் எல்லையில் உள்ள செக்போஸ்டில் வாகனத்திலிருந்து எப்படியோ தப்பித்து மும்பையில் உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேயின் இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். ஐந்து கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார். வழியில் ஒரு பைக்கிலும், பின்னர் ஒரு டிரக்கிலும் ஏறி மும்பையை அடைந்துள்ளார். பலவந்தமாக தன்னைப் போன்ற சிவசேனா எம்எல்ஏக்களை அழைத்துச் சென்றார்கள் என்பதே அவரது வாக்குமூலம். பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயகம் எத்தனை ‘பெருமைப்படத்தக்கதாக’ இருக்கிறது பாருங்கள்.
தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், அரசாங்கம் அமைப்பது எப்படி என்ற கலையை பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. கோவா, கர்நாடகா, ம.பி. பாணியில் அடுத்து எந்த மாநிலம்?
இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு பின்னால் பெரும் கார்ப்ப
ரேட் கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு வாரி வழங்கும் பணம் விளையாடுகிறது.