கோவை, ஜூன் 13- கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரம், பந்தயசாலை பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாச னின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற் குள் திங்களன்று மாலை இளைஞர் ஒருவர் நுழைந்து உள்பக்கமாக தாழிட முயன்றதாக கூறப்படுகிறது. அலுவலகத்திலிருந்த உதவி யாளர் ஒருவர், அந்த இளைஞரை வெளியே அழைத்துச் சென்று, சாலையில் தள்ளியுள் ளார். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அண்ணா சிலை, சிக்னல் அருகே சாலையில் சடலமாக கிடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாச னின் அலுவலகத்தின் உள்ளே மற்றும் வெளிப் புறத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினர் கைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.