மணிப்பூரில் கடந்த 4 மாத காலமாக நிகழ்ந்து வரும் வன்முறை கல வரத்தை சாதகமாக கொண்டு தலை நகர் இம்பாலில் இருந்து குக்கி பழங்குடி மக் களை விரட்டும் பணி யில் ஆளும் பாஜக அரசு இறங்கியுள்ளது. பல ஆண்டு காலமாக இம் பாலின் நியூ லாம்பு லேன் பகுதியில் வசித்து வரும் 10 குக்கி பழங்குடி குடும்பங்களை, குக்கி மக்கள் பெரும்பான்மையாக வாழும் காங்போக்பி பகுதிக்கு மணிப்பூர் பாஜக அரசு மாற்றியுள்ளது. வன்முறையால் பாதிக் கப்பட அதிக வாய்ப்புள்ளது என சாக்கு போக்கு கூறி அதிகாரிகள் குக்கி பழங்குடி குடும்பங்களை விரட்டியுள்ளனர். வெளி யேற்றப்பட்ட குக்கி குடும்பங்கள் கூறுகை யில்,”நாங்கள் வன்முறை அரங்கேறிய நாள் முதல் இன்று வரை இதே பகுதியில்தான் உள்ளோம். ஆனால் பலவந்தமாக வெளியேற்றிவிட்டனர்” என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளனர்.