ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்பது பாஜக-வுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் மாநிலத்தில் தோ்தலை நடத்தாமல் உள்ளனா் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். “காஷ்மீரில் மட்டுமின்றி, இப்போது ஜம்மு-விலும் பாஜக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா். ஜம்மு - காஷ்மீரில் மக்களவைத் தோ்தலை மட்டுமே பாஜக நடத்த வாய்ப்புள்ளது. ஏனெனில், அதனை நடத்தாமல் ஒத்தி வைக்க முடியாது. ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட சில அதிகாரிகள் இங்கு சட்டப் பேர வைத் தேர்தல் நடத்துவதை விரும்ப வில்லை. ஜம்மு - காஷ்மீரில் 80 சதவிகித மக்கள் இப்போதைய நிலை யிலேயே மகிழ்ச்சியாக உள்ளனர் என்று துணைநிலை ஆளுநர் கூறுகிறார். இதில் இருந்தே அவரது மன நிலையை உணா்ந்து கொள்ளமுடிகிறது. ஜம்மு - காஷ்மீரை பயங்கரவாதத் தில் இருந்து விடுவித்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது தவ றான தகவல். இப்போது வரை பிரச்ச னைகள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன” என்றும் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.