states

அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் சேர பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

புதுதில்லி, நவ.27-  அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்  போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாய மாக்கும் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்  தொடரில் தாக்கலாக உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒன்றிய அரசு சில முக்கிய மசோ தாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.  இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுப்  பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்கும் சட்டத்தை மேலும் வலுவாக்கி அதனை அர சின் ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்வதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப் பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு,  அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட வருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில் உட னடியாக வழங்க முடியும்.

பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யா மல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமா கும் என்றாலும் கூட, பள்ளிகளில் மாண வர்கள் சேர்க்கை மற்றும் திருமணங்களைப் பதிவு செய்தல் போன்ற அடிப்படை சேவை களைப் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்  துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்ச கம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில்  திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மேலும் சில விஷயங்களை முன்மொழிவு செய்துள்ளது.  இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்  காலக் கூட்டத் தொடரில், பிறப்பு - இறப்பு  பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்  பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்  புள்ளது.  இந்த வரைவு மசோதாவை கொண்டு  வருவது தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப் பட்டன.

அதன்படி மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, இச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் சேர்த்துள்ளோம். இந்த மசோதாவை சட்டமன்றத் துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய அமைச்ச ரவையின் ஒப்புதலுக்காக வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வரவிருக்கும் நாடா ளுமன்றக் கூட்டத் தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருப்பதால், மசோதா மீதான விவாதங்கள் அடுத்த அமர்வில் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியப் பதிவாளர் ஜென ரல் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் பராமரிக்கப்படுகிறது. அவர்களின் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார்,  ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரி மத் தரவுத்தளங்களையும் புதுப்பிக்க முடியும். சிவில் பதிவு மையம் அளித்த  அறிக்கையின்படி, நாடு முழுவதும் பிறப்பு களின் பதிவு 2010ல் 82.0 சதவீதமாகவும், 2019ல் 92.7 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2010ல்  66.9 சதவீதமாகவும், 2019ல் 92.0 சதவீதமாக வும் அதிகரித்துள்ளது’’ என்று கூறியுள் ளன.