states

img

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான வழக்கை ஜூலைக்கு முன்னதாகவே விசாரிக்க வேண்டும்

பாட்னா, மே 6 - பீகாரில் சாதிவாரி கணக் கெடுப்புக்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலை யில், இவ்வழக்கை விரைந்து  விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி, மகா கூட்டணி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பீகாரில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதற்கட்ட கணக் கெடுப்பு ஜனவரி 7 அன்று துவங்கி  21-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. இது மே 15 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் வியாழ னன்று இடைக்காலத் தடை விதித்தது. தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமையி லான அமர்வு இந்த உத்த ரவை பிறப்பித்தது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசா ரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பாட்னா உயர் நீதி மன்றத்தின் இந்த இடைக் காலத் தீர்ப்பு, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரிய ஜனதாதளம்- காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய ஆளும் மகா  கூட்டணிக்கு பின்னடைவாகப் பார்க் கப்பட்டது. வழக்கை திறம் பட நடத்தாததே இடைக் காலத் தடைக்குக் காரணம் என எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது.  இந்நிலையில், ஜூலை க்கு முன்னதாகவே விசா ரித்து தீர்ப்பு வழங்கக் கோரி, பீகார் அரசுத் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பீகார் அரசின் அட்வகேட் ஜெனரல் பி.கே. ஷஹி செய்தியாளர்க ளுக்குப் பேட்டி அளித்துள் ளார். அதில்,  “சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான வழக்கை ஜூலை 3-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. எனினும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி, நாங்கள் மனுத் தாக்கல் செய்துள் ளோம். மேலும், நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பு விவரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அரசு என்ன செய்ய முடி யுமோ அதனை செய்யும்”  என்று தெரிவித்துள்ளார்.