தமிழ்நாட்டில் கட்டைவிரலையாவது ஊன்றி விட வேண்டும் என்று பாஜக குட்டிக்கர ணம் அடித்து வருகிறது. அதில் ஒன்றுதான் “ரோடு ஷோ”. எனும் வாகனப் பேரணி. கோவை யிலும் சென்னையிலும் பிரதமர் மோடி நடத்திய “ரோடு ஷோ”. பிசுபிசுத்துப்போனது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கூட்டத்திற்கும் மக்கள் திரளவில்லை. இதனால் தமிழக பாஜக அதிர்ச்சியடைந்தது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோவும் தொடர்ச்சியாக ரத்து செய்யப் பட்டது. சும்மா பெயருக்காவது நடத்திவிடு வோம் என்று தோற்றுப்போன ரோடு ஷோவை மதுரையில் ஏப்ரல் 12 அன்று காட்டினார்கள். மதுரையின் மையப்பகுதியான நகைக் கடைகள் நிறைந்த, எந்நேரமும் மக்கள் கூட்டம் இருக்கின்ற நேதாஜி ரோட்டிலிருந்து அமித்ஷாவின் ரோடு ஷோ தாமதமாகவே துவங்கியது. பாஜகவினர் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. இதனால் விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு முன்னதாகவே, சித்திரை திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சி யை காண வந்த பெருங்கூட்டத்தை கண்டு, அங்கேயே அமித்ஷா பேசி ஷோவை முடித்தார்.
ராமரை அரசியல் ஆதாயத்திற்காக பயன் படுத்தும் பாஜக, இந்த ரோடு ஷோவிற்கும் ராமர், சீதை, சிவன், அனுமான் வேஷ மிட்டவர்களை அழைத்து வந்தது. வந்திருந்த கூட்டத்தில் பாதியளவிற்கு மேற்பட்டோர் வட இந்தியர்கள்தான். இவர்கள் ஆங்காங்கே கும்பலாக நின்றனர். இந்த கூட்ட எண்ணிக்கையில் கடைகளில் பணிபுரிபவர் கள் வாசலில் வந்து வேடிக்கை பார்த்ததும்உண்டு. ரோடு ஷோவில் வந்தது யார் என்பதே பல பெண்களுக்கு தெரியவில்லை. பள்ளி மாணவர்களை கட்சியின் டி.ஷர்ட் அணிந்து பங்கேற்க வைத்ததும் ஒருவருக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பேசி அழைத்து வந்ததும் அதில் பங்கேற்ற பெண்களும் கட்சியினரும் பேசியதில் தெரிந்தது. அமித்ஷாவின் பிரச்சார வாகனம் கடந்து சென்றவுடன் மக்கள் கலைந்துசென்றனர். இறுதியாக அவருடைய பேச்சை வந்த வர்கள் கேட்கவில்லை. மொத்தத்தில் வட இந்தியர்களை வைத்து மதுரையில் “ஷோ” காட்டியுள்ளனர் அமித்ஷாவும் பாஜகவினரும்.
மதுரை வளரணும்னா... பாஜக தோற்கணும்
அமித்ஷா வருவதற்கு முன்னதாக மதுரை பாஜக வேட்பாளர் இராம.சீனிவாசன் கோஷ மிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மதுரை வளரணும்னா, தாமரை மலரணும் என்று கூற, அவர்கள் கட்சியினரும் உரத்த குரலில் கூறினர். 10 ஆண்டுகளாக மதுரை மட்டு மல்ல, இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றியே கவலைப்படாத பாஜகவினர், தேர்தல்காலத்தில்தான் வளர்ச்சியைப் பற்றி வாய்கிழிய கூறுகிறார்கள். மதுரையில் ஒத்த செங்கல்லை மட்டுமே வைத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவ மனையை கட்டும் பணியை தொடராமல் உள்ளது மோடி அரசு, மதுரைக்கு ஒரு தொழிற்சாலையைக்கூட கொண்டுவர வில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப் பிழப்பு நடவடிக்கையால் தொழில்களை அழித்த பாஜக அரசு, மதுரைக்கு எந்த வளர்ச்சித்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மதுரை வளர வேண்டும் என்றால் தமிழகம், இந்தியா வளர வேண்டும் என்றால் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று மதுரை மக்களும் தமிழக மக்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.
-எஸ். உத்தண்ட்ராஜ்