ஒன்றிய அரசின் நடவடிக்கை
துணை இயக்குநரின் குறிப்பாணையில், இந்திய அரசு துப்புரவுப் பணியாளருக்கான (சபாய் கரம்சாரிஸ்) தேசிய ஆணையத்தின் தலைவர் தலைமையில் 14.03.2022 இல் நடந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றிய அரசின் நேரடி தலையீடு அம்பலமாகி உள்ளது. இது மாநில உரிமைகளை பறிக்கும் நேரடி நடவடிக்கை என்கிறார் ஸ்டாலின்தாஸ். ஊழியர்களின் நலன் சார்ந்து மாற்றுக்கொள்கையை தமிழக அரசு வகுத்து அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு நேரடி வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகனுடன் சென்று மனுகொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகர்கோவில், மே 26- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அடிப்படைத் தொழிலாளர்களை ஒப்பந்த தாரர்கள் வசம் ஒப்படைத்து கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் முயற்சி நடப்ப தாக உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சிஐடியு) குற்றம் சாட்டியுள்ளது. அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசும் துணை போகிறதா என்கிற கேள்வியுடன் உள்ளாட்சி ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 51 பேரூராட்சிகளைக் கொண்டது கன்னியா குமரி மாவட்டம். 1500 க்கும் மேற்பட்டோர் திடக்கழிவு மேலாண்மை திட்டச் செயலாக்கத் திற்கு தூய்மைப் பணியாளர்கள், ஓட்டு நர்கள், குடிநீர் திட்டங்களை இயக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிறு பகுதியினர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். 2006 க்கு பிறகு ஒப்பந்த முறை யில் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒவ்வொரு பேரூராட்சியிலும் வெவ்வேறு தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரால் அனைத்து பேரூராட்சிகளுக்கும் அனுப்பப் பட்ட குறிப்பாணை எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் உள்ளது. அதில் ‘மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையின்படி ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.615 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை நேரடியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக மனித ஆற்ற லை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் வசம் சம்பளம் வழங்கப்படும். இற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோர அனைத்து பேரூ ராட்சிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 10 சதவிகிதம் வரையிலான சேவைக்கட்டணத்துடன் தொழி லாளர்களின் பிஎப், இஎஸ்ஐ கணக்கை ஒப்பந்ததாரர் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல் குறிப்பாணையில் உள்ளது.
திற்பரப்பு எடுத்துக்காட்டு
இதுகுறித்து குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவரும் திற் பரப்பு பேரூராட்சி துணை தலைவருமான எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் கூறுகையில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என கேட்பது ஒப்பந்ததாரர்களிடம் கொத்தடிமையாக வேலை செய்வதற்கு அல்ல. சுற்றுலா மாவட்ட மான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வரு கிறார்கள். அவர்களுக்கு சிறந்த சேவை யை வழங்கவும் தூய்மையைப் பராமரிக்க வும் தங்களால் முடியும் என்பதை திற்பரப்பு பேரூராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். இங்குள்ள 23 தொழிலாளர்கள் குழுவாகச் செயல்பட்டு பேரூராட்சியிடமிருந்து சம்பளத்தை காசோலையாக பெற்று இசிஎஸ் முறை யில் ஒவ்வொருவரது கணக்கிலும் செலுத்து கிறார்கள். அதுபோல் பிஎப், இஎஸ்ஐ க்கும் பணம் செலுத்தி வருகிறார்கள்.
ஒப்பந்ததாரர் என்று நடுவில் ஒரு நிறு வனம் வரும்போது கூடுதல் தொழிலாளர் களை கணக்குக் காட்டி அதிக தொகை பெறு வார்கள். பேரூராட்சிக்கு கூடுதல் செலவு ஏற்படும். தொழிலாளர்களுக்கு முழுமை யான சம்பளம் கிடைக்காது. ஊழல் முறை கேடுகளுக்கு அதிக வாய்ப்பாகிவிடும். ஒப்பந்ததாரரை கார்ப்பரேட் முறையில் தீர்மானிப்பதற்கான வாய்ப்பே அதிகம். ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மொத்த டெண்டரையும் வேறு ஒருவர் மூலம் எடுத்து, சார்பு ஒப்பந்தம் (சப் காண்ட்ராக்ட்) விடுவதற்கான முயற்சி நடப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்ப ஒப்பந்ததாரரை தீர்மானிப்பதற்கான 12 நிபந்த னைகள் கூறப்பட்டுள்ளன. அதில் மனித ஆற்றலை வழங்கும் நிறுவனம் குறைந்த பட்சம் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு மனித ஆற்றலை வழங்கிய 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை (Turnover) செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதபூஜையும் எட்டி உதைப்பும்
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை உள்ளாட்சி அமை ப்புகளே மேற்கொள்வதை கைவிட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு மாற்றை திற்பரப்பு பேரூராட்சியில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் ஊழியர்கள். இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு மற்ற இடங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்டாலின் தாஸ்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, வேலையின்மையால் ஏராளமான இளம் தலைமுறையினர் உள்ளூரில் கிடைக்கும் தூய்மைப் பணிக்கு வந்துள்ளனர். அவர்களில் பட்டதாரிகளும் உள்ளனர். பெருந்தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்தவர்கள் இப்போது ஒப்பந்ததாரர்களை பயன்படுத்தி எட்டி உதைக்கச் செய்வதுபோல் உள்ளது என குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.