states

img

ஆர்எஸ்எஸ்-சால் இயக்கப்படும் சாதியக் கட்சிதான் பாஜக!

லக்னோ, பிப்.23- சமாஜ்வாதியைப் போல, பாஜக-வும் ஒரு சாதியக் கட்சிதான் என்று பகு ஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார். உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அங்குள்ள பாயாக் பூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மாயாவதி உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி, ஒன்றிய அளவி லும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தபோது சாதியவாதத்துடன் செயல் பட்டது. தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு எதிராக செயல்பட்டது. அம்பேத்கருக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க மறுத்து விட்டது. கன்சிராம் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கவில்லை.

மண்டல் கமி ஷன் சிபாரிசுகளைக் கூட அமல்படுத்த வில்லை. சமாஜ்வாதி கட்சி, ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட பிரிவினருக்காக இயங்கி வருகிறது. நமது தலைவர்கள் பெயரில் இருந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை சமாஜ் வாதி ஆட்சி மாற்றியது. அதேபோல பாஜக-வும் சாதியக் கட்சி தான். அது ஆர்எஸ்எஸ்-சால் இயக்கப்படு கிறது. தலித்துக்கள், பழங்குடிகள், பிற் படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோ ருக்கான திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியது. இடஒதுக்கீட்டு பலன்களை அளிக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தை பகுஜன் சமாஜ் கட்சி 4 முறை ஆட்சி செய்தது. மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. இப்போதும் பகுஜன் சமாஜ் மீண்டும் ஆட்சிக்கு வந் தால், வேலை கிடைக்காமல் உத்தரப் பிர தேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர் களை திரும்ப அழைத்து வேலை கொடுப்போம். விவசாயிகள் மீது  போடப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு திரும்பப் பெறப்படும். குண்டர்கள் சிறை யில் தள்ளப்படுவார்கள். இவ்வாறு மாயாவதி பேசியுள்ளார்.