புதுதில்லி,ஜன.15- முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக திடீரென மாறிய மோசமான வானிலையே காரணம் என்றும் இதனால் பைலட் மேக மூட்டங்களுக்குள் செல்ல நேர்ந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று முப்படை விசாரணைக் குழு தெரி வித்துள்ளது. இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8 அன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பிபின் ராவத் அவருடைய மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசா ரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசா ரணை நடத்தியது. விபத்துக்குள் ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் களத்தில் கிடைக் கப் பெற்ற தகவல்களின் அடிப்ப டையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம், இனி எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை கள், அதற்கான பரிந்துரைகள் ஆகியவை விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றிருப்ப தாகக் கூறப்படுகிறது. இந்நிலை யில், விசாரணை அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், “விசாரணையின் படி இயந் திரக் கோளாறோ அல்லது சதி வேலையோ, விமானியின் கவ னக்குறைவோ விபத்திற்குக் கார ணம் இல்லை. திடீரென வானிலை மோசமடைந்தபோது ஹெலிகாப் டர் அந்த மேகமூட்டத்துக்குள் சிக்கியது. இதனால் விமானம் திசை மாறி எதிர்பாராமல் தரையில் விழுந்து நொறுங்கியது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.