புதுதில்லி, நவ. 20- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள் பேச்சுவார்த்தை’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் திங்கள் கிழமை காலை இந்தியா வந்தார். அவரை தில்லி விமான நிலை யத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வரவேற்றதாக வெளி யுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் பக்க த்தில் பதிவிட்டுள்ளார். “ பென்னி வாங், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது 2+2 அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 14வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய துணைப் பிரதம ரும், பாதுகாப்புத் துறை அமைச்ச ருமான ரிச்சர்ட் மார்லஸ் ஞாயிற்றுக் கிழமையே இந்தியா வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.