states

img

மதுக்கடைக்குள் புகுந்து உமா பாரதி ரகளை!

போபால், மார்ச் 14 - மத்தியப் பிரதேச மாநில முன்னாள்  முதல்வரும், பாஜக-வைச் சேர்ந்த பெண் சாமியாருமான உமா பாரதி, மது பானக்கடை மீது கற்களை வீசி ரகளை யில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.  உமாபாரதி பாஜக-வின் அதிகார மிக்க தலைவர்களில் ஒருவர் ஆவார். மதுக்கடைகளை மூடவேண்டும் என்று  பேசுவதை அவ்வப்போது வாடிக்கையாக வைத்திருக்கும் இவர், அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதை யும் எடுப்பதில்லை. முதல்வர் சிவராஜ்  சிங் சவுகானிடமும் இதுவரை எந்த  கோரிக்கையையும் அவர் வைக்க வில்லை. “போபால் நகரில் தொழிலாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் மதுக் கடைகள் அதிக அளவில் உள்ளன. திறந்த வெளியில் மது விற்கிறார்கள். குடிகாரர்களும் திறந்த வெளியிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். வேலை  பார்த்துச் சம்பாதிக்கும் பணத்தை யெல்லாம் குடியிலேயே செலவழிக் கின்றனர். இதனால் பெண்கள்தான் கடு மையாக பாதிக்கப்படுகின்றனர்.

குடும் பத்தை நடத்த முடியாமல் தவிக்கின்ற னர். மேலும் சாலைகளில் அமர்ந்து இவர்கள் குடிப்பதால், வீதிகளில் செல்லும்  பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளா கின்றனர்” என்று பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில், ஞாயிறன்று போபா லில் உள்ள ஒரு மதுக் கடைக்கு பாஜக -வினர் புடைசூழச் சென்ற உமா பாரதி,  கடையை ஒரு வாரத்தில் மூட வேண்டும் என்று கூறி, அந்தக் கடை யின் ஊழியர்களிடம் ரகளையில் ஈடு பட்டதோடு, கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து கடைக்குள் வீசி, பாட்டில்களை உடைத்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது உமாபாரதி பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் விளம்பர முயற்சியே அன்றி வேறில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மறுபுறத்தில், ம.பி. மாநில பாஜக அரசோ, மதுபானங்களின் விலையைக் குறைத்திருப்பது மட்டுமன்றி, மதுக் கடைகளில் உள்ளூர் சரக்குகளுடன் வெளிநாட்டு சரக்குகளையும் சேர்த்து விற்கவும் தற்போது அனுமதி அளித் துள்ளது.