states

img

திருப்பதிக்கே லட்டு, திருடனுக்கே...!

திருப்பதிக்கே லட்டு, திருடனுக்கே...! அசாமைச் சேர்ந்த மகாலட்சுமி குழுமம், மீண்டும் மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச் சாட்டுகளைச் சந்தித்த நிறுவனம். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 2011இல் இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரியை வெளிச் சந்தையில் விற்றதாக சிபிஐ ரெய்டு நடத்தி, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தது. மீண்டும் நிலக்கரி கொள்முதலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 2016இல் மற்றொரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் உரிமையாளரான நவீன் சிங்கால் என்பவருக்குத் தொடர்புடைய இடங்களில் 2020 டிசம்பரில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்படுகிறது. அதன்பிறகுதான் க்ளைமேக்ஸ்! அடுத்த 3 மாதங்களுக்குள், இந்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.2.85 கோடி நிதியளிக்கிறது. அடுத்த ஆண்டில் மேலும் ரூ.7.45 கோடியும், அதற்கடுத்த ஆண்டில் ரூ.1.49 கோடியும் பாஜகவிற்கு அளிக்கிறது. ஆக மொத்தம் ரூ.11.79 கோடி நிதியைப் பெற்றுக் கொண்டதற்குக் கைமாறு வேண்டாமா? அடுத்த ஆண்டில், அருணாசல பிரதேசத்திலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்திற்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது!