புதுதில்லி, ஏப்.24- லக்கிம்பூர் கெரியில் விவசாயி கள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ரா வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஞாயி றன்று மீண்டும் சிறையில் அடைக் கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்-கெரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் காரை ஏற்றினர். இதில் விவசாயிகள் 4 பேர் பத்திரிகை யாளர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரி ழந்தனர். ஒன்றிய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது காரை ஏற்றி யதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் உயர்நீதி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த ஒரு விவசாயி ஒருவரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் லக்கிம்பூர் வன்முறையில் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்தும் குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண் டும் என்றும் கூறி உத்தரவிட்டனர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தில் ஞாயிறன்று, வேறுவழியின்றி காவல்துறையில் சரணடைந்து தம்மை சிறைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண் டார். இதையடுத்து அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.