states

img

தில்லி: ஓட்டலில் ராணுவ வீரர் தற்கொலை

தலைநகர் தில்லியில் ராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லி பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் ராணுவ வீரர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் தங்க வந்துள்ளார். அதன் பின் இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைத்தொடந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 
அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு சிறுமி ஒருவரை அவர் துன்புறுத்தியதே காரணம் என ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.