அகமதாபாத்,பிப்.26- இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடப் பொருள்கள் 85 சதவீதம் இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன என்று ராணுவ தலைமைத் தளபதி தெரி வித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பேசுகையில், இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த தளவாடங்களானாலும் 85 சதவீதம் இந்திய நிறுவனங்களி டம் இருந்தே வாங்கப்படுகின்றன. இந்திய பாதுகாப்புத்தொழி லின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் மாற்றுவதற்கு சென்னை மற்றும் லக்னோவில் உள்ள பாதுகாப்பு தளவாட மையங்கள் உதவி புரிந்துள்ளன என்று தெரிவித்தார்.