states

யாசின் மாலிக்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்குமாறு என்ஐஏ மேல்முறையீடு!

புதுதில்லி, மே 30 - பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி  திரட்டிய வழக்கில், காஷ்மீர் பிரிவினை வாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்கு மாறு தேசிய புலனாய்வு முகமை, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இம்மனு தொடர்பாக பதிலளிக்குமாறு யாசின் மாலிக்கிற்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக். இவர், ஜம்மு - காஷ்மீரு க்கு தனி நாடு அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக அவர்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. மேலும் பயங்கர வாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, மும்பைத் தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளின் கீழும் யாசின் மாலிக் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான ‘ஊபா’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (NIA), யாசின் மாலிக் மீது அண்மையில் சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிமன்றமும் யாசின் மாலிக்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவித் தது. யாசின் மாலிக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து யாசின் மாலிக் தில்லி திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஆனால், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு தூக்குத் தண்ட னை விதிக்குமாறு, தேசிய புலனாய்வு முகமையானது, தில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்த மனு, தில்லி உயர் நீதி மன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, யாசின் மாலிக் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார் என்றும் இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.  மேலும், “ஒரு பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதால், தூக்குத் தண்டனை விதிக்கப்படாது என்று கூறுவது முறையல்ல; ஏனெனில், தூக்குத் தண்டனையை தவிர்க்க குற்றஞ் சாட்டப்பட்ட நபர் தந்திர வேலைகளை கையாளலாம்; யாசின் மாலிக், அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைப் போன்ற பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்; ‘2008’ மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நான்கு பயங்கரமான குற்றவாளிகளை விடுதலை செய்ய வழிவகுத்தவர் யாசின் மாலிக்; அதற்காக இந்திய விமானப் படை அதிகாரிகள் நான்கு பேரை கொலை செய்தார்; அப்போதைய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகளை யும் கடத்தினார். எல்லையைக் கடந்து பாகிஸ்தான் சென்று பல்வேறு உளவு வேலைகளிலும் யாசின் மாலிக் ஈடு பட்டார். எனவே, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்” என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், என்ஐஏ-வின் மேல்முறையீடு தொடர் பாக பதிலளிக்குமாறு திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் ஆகஸ்ட் 9 அன்று நடைபெற உள்ள அடுத்த அமர்வின் போது யாசின்  மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.