states

img

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு  

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.    

நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் தில்லியில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசின் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்களும் பயனடைவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.