states

‘நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளியுங்கள்’

புதுதில்லி, ஜன.31-  நீட் விலக்கு மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக திமுக  கூட்டணி எம்.பி.க்கள் நாடா ளுமன்றத்தில் வலியுறுத்தினர்.  பட்ஜெட் கூட்டத்தொட ரின் முதல் நாளான திங்க ளன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலை வர் வருகை தந்தார். குடியர சுத் தலைவர் உரையை தொட ங்குவதற்கு முன்பாக தமிழ கத்தில் நீட் விலக்கு மசோதா வுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என திமுக, காங்கிரஸ் உறுப் பினர்கள் வலியுறுத்தினர்.  தொடர்ந்து முழக்கங் களும் எழுப்பப்பட்டது. நீட் தேர்வால் மாணவ, மாணவி கள் உயிரிழக்க நேர்வதாக வும் திமுக நாடாளுமன்ற குழு   தலைவர் டி.ஆர்.பாலு வேதனை தெரிவித்தார்.