சென்னை,அக்.8- ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன் முறை யாக 107 பதக்கங்களை அள்ளியதன் மூலம் அபார மான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப் படுத்தியிருக்கும் வீரர்க ளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதி வில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியின ருக்கு எனது பாராட்டுகள். 107 பதக்கங்களை அள்ளியதன் மூலம் அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்ப ணிப்பை நமது விளை யாட்டு வீரர்கள் வெளிப்படுத் தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்தி ரங்கள் என இந்தியாவின் பல தரப்பட்ட திறமையாளர் களும் பெரிதும் இத்தொட ரில் மின்னியுள்ளனர். குறிப்பாக, தமிழ் நாட்டை சேர்ந்த நமது வீரர் களுக்கு சிறப்பு பாராட்டு களை உரித்தாக்கு கிறேன். உங்களின் தனிச் சிறப்பான பங்களிப் பால் உலக அரங்கில் நமது மாநிலத்திற்கு பெருமிதம் பொங்க செய்துள்ளீர்கள். இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித் துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனை களும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு”என்று பதிவிட்டுள்ளார்.