states

img

சமூக நீதிக்கு கேரளா முன்மாதிரி

குடியரசு துணைத் தலைவர் தன்கர் பாராட்டு

திருவனந்தபுரம், மே 23- சமூக நீதிக்கு கேரளா, நாட்டிற்கு  முன்னுதாரணமாக உள்ளது என்று  குடியரசு துணை தலைவர் ஜெகதீஸ்  தன்கர் கூறினார். சட்டப் பேரவைக் கட்டிடத்தின்  வெள்ளி விழா கொண்டாட்டங்க ளைத் தொடங்கி வைத்து அவர்  மேலும் கூறுகையில், தொலை நோக்கு பார்வைக்கும் சமூக நீதிக் கான அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற மாநிலம் கேரளா என குறிப் பிட்டார். மற்ற சட்டமன்றங்கள் கவ னத்தில் கொள்ள வேண்டிய பல  முற்போக்கான சட்டங்கள் இங்கு  இயற்றப்பட்டுள்ளன. ஜனநாயகத் தில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கான ஆற்றலை அரசியல் நிர்  ணய சபையில் இருந்து பெற வேண்  டும். நாட்டிலேயே அதிக இணைய தொடர்பைக் கொண்டுள்ள ஒரு  மாநிலமாக கேரளா உள்ளது.  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்க ளின் திறனைப் பயன்படுத்தும் நாடு  கேரளா. மாநிலத்தின் தரமான மனித வளம் மற்றும் முற்போக்கான பணி  கலாச்சாரம் ஆகியவை நிர்வாகத் தில் புதிய பாதைகளை உருவாக்க உதவும். உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்காற்றிய புலம்பெயர் மலையாளிகளுக்கு பாராட்டுகள். தொலைநோக்கு பார்வைக்கும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்புக்கும்  பெயர் பெற்ற மாநிலம் கேரளா. கேர ளாவின் செயல்பாடுகள் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார். வாக்குச்சீட்டு மூலம் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற வரலாற்றை இஎம்எஸ் நம்பூ திரிபாட் படைத்தார். அரசமைப்பு  விதிகளை தவறாக பயன்படுத்தி யதன் மூலம் அந்த அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

முற்போக்கு ஜனநாயக கேரளா வை சட்டத்தின் மூலம் சாத்திய மாக்கும் பெரும் பாரம்பரியத்தை கேரள சட்டமன்றம் கொண்டுள்ளது.  கேரள சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்த நரம்பு  மண்டலமாக கேரள சட்டமன்றத் தால் மாற முடிந்தது. கேரள சட்டப் பேரவையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் 100க்கும் மேற்பட்ட  சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளன. ஆண்டுக்கு சராசரியாக 44 நாட்கள் சட்டமன்றம் கூடுவது ஜன நாயகத்தின் வலிமையைக் காட்டு கிறது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளை சகித்துக் கொள்ளா மையை நியாயப்படுத்த முடியாது. அனைத்து எண்ணங்களும் பார்வை களும் உரிய முறையில் பரிசீலிக் கப்படும் போதுதான் ஜனநாயகம் மலர்கிறது. ஜனநாயக அமைப்பில் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் இருக்கும். இவை மோதலின் மூலம்  அல்ல, கூட்டான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என் றார். இணையற்ற பன்முகத்தன்மை ஒருமைப்பாட்டுடன் இணையும் மாபெரும் ஜனநாயக நாடு இந்தியா. தேசத்திற்கு சேவை செய்வதற்கும் ஜனநாயக விழுமியங்களை முன் னேற்றுவதற்கும் பரஸ்பர நம்  பிக்கை நன்மதிப்பு அவசியம் என்றார். பேரவை புத்தகத் திருவிழா மலரை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். சட்டப்பேரவையை அழகுபடுத்தும் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். ஆளுநர்  ஆரிப் முகமதுகான், முதல்வர் பின ராயி விஜயன், சபாநாயகர் ஏ.என். ஷம்சீர், அமைச்சர் கே.ராதாகிருஷ் ணன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் பேசினர்.