states

img

மோடி அரசு நிறைவேற்றிய மசோதாக்களை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்!

மணீஷ் திவாரி எம்.பி. கோரிக்கை

புதுதில்லி, ஜூலை 31 - ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்ப ட்ட பின்னர், நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள் நீதி மன்றத்தால் ஆய்வு செய்யப் பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால், அதன்பிறகு புதிய மசோதாக்களை நிறை வேற்றுவது போன்ற நட வடிக்கைகள் மேற்கொள் ளப்படுவதில்லை என்பது மரபாக உள்ளது. ஆனால், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மா னத்தை மக்களவைத் தலை வர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்ட பிறகும், பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வரு கிறது.

 இதுதொடர்பாக காங் கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: கடந்த 1966-ஆம் ஆண்டு  ஜூலையில் ஒன்றிய அர சுக்கு எதிராக நாடாளு மன்றத்தில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  அதுபோன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டால், மசோதா நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை அவையில் மேற்கொள்ளக் கூடாது என்பதை அப்போ தைய நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் சத்யேந்திர நாராயண் சின்ஹா ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தற்போது மக்களவையில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், புதிய சட்டங்களை இயற்றுவது போன்ற எந்தவொரு நட வடிக்கையையும் அந்த அவையில் மேற்கொள்வது நாடாளுமன்ற மரபு களை மீறுவதாகும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகு மக்களவை மற்றும் மாநி லங்களவையில் நிறை வேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் அரசமைப்புச் சட்டரீதியாக சந்தேகத்துக்கு உரியவை. எனவே, இந்த மசோதாக்கள் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்பது நீதி மன்றத்தால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு மணீஷ் திவாரி கூறியுள்ளார்.