states

img

பிபிசி ஊடகம் மீது அமலாக்கத்துறை வழக்கு!

அந்நியச் செலாவணியில் முறைகேடு என குற்றச்சாட்டு

புதுதில்லி, ஏப். 13 - புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான ‘பிபிசி’-யின் இந்திய பிரிவு (BBC India) மீது, ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத் துறை இயக்குநரகம் (ED) அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.  பிபிசி நிறுவனம் வெளிநாட்டு நிதி  பெற்றதில் முறைகேடு செய்திருப் பது கண்டறியப்பட்டு உள்ளதன் அடிப்படையில் இரண்டு வாரங் களுக்கு முன்பே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது விட்டது; இதுவரை பிபிசி இந்தியாவின் இயக்குநர் உள்பட 6 ஊழியர்களிடம் விசாரணை யும் நடத்தப்பட்டு உள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ், பிபிசி நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பிபிசி மீதான இந்த வழக்கு நடவடிக்கை இந்திய அரசியலில் மீண்டும் விவாதங் களைக் கிளப்பியுள்ளது.

இன்றைய பிரதமர் நரேந்திர மோடி முன்பு, குஜராத்தில் முதல்வ ராக இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெரும் கலவரம் தூண்டிவிடப்பட்டது. இந்த கல வரத்தில் 790 முஸ்லிம்கள், 254 இந்துக் கள் கொல்லப்பட்டனர். 223  பேர்  காணாமல் போயினர். 2 ஆயிரத்து 500 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 2005-ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதனடிப்ப டையில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அன்று முதல்வராக இருந்த நரேந்திர மோடி, உள்துறை அமைச் சர் அமித்ஷா உள்ளிட்டோர் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2014-இல் பாஜக ஒன்றிய  அரசு ஆட்சியதிகாரத்திற்கு வந்தபின்,  இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட மோடி,  அமித்ஷா  உள்ளிட்ட அனைவருமே போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை என்று அடுத்தடுத்து நீதிமன்றங் களால் விடுதலை செய்யப்பட்டனர். இவை நாடுமுழுவதும் கேள்விக்கு உள்ளாகின. இந்நிலையில், இஸ்லாமியர் களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட மத வன்முறைகள் தொடர்பாக, பிரிட் டன் அரசின் செய்தி ஒளிபரப்பு நிறு வனமும், சர்வதேச ஊடகமுமான ‘பிபிசி’ (British Broadcasting Corporation - BBC), ‘இந்தியா- மோடி என்கிற கேள்வி’ (India: The  Modi Question) என்ற தலைப்பி லான ஆவணப்படத்தை, 2023 ஜன வரி 17 மற்றும் ஜனவரி 23 ஆகிய தேதி களில் இரண்டு பாகங்களாக வெளி யிட்டது.

இந்த ஆவணப்படமானது, 2002 குஜராத் வன்முறையில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித்தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங்களோடு எடுத்துக் காட்டும் வகையில் இருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை துவங்கி, இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளி யுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா கூறிய கருத்துக்கள் முதற்கொண்டு, குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கை கள், கலவரத்துக்கு அப்போது குஜ ராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோரின் வீடி யோக்கள் ஆகியவை இந்த ஆவ ணப்படத்தில் இடம்பெற்றிருந்தன.  இதுவும் நாடு முழுவதும் புதிய  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பதறிப்போன ஒன்றிய பாஜக அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் விதி 16- வழங்கும் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் ‘பிபிசி’  ஆவணப்படத்திற்கு தடைவிதித்தது.  யூடியூப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக் காட்சியிலும் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பப்படுவதை தடுத்து நிறுத்தி யது. எனினும், வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளின் மூலமாக இந்தப்படம், இந்தியாவி லுள்ள பல்வேறு மாநில பல்கலைக் கழகங்களில் மாணவர்களால் திரை யிடப்பட்டன. காங்கிரஸ், இடதுசாரி கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்படத்தை பொது இடங்களில் திரையிட்டு, நரேந்திர மோடியின் மதவெறி கோர முகத்தை அம்பலப் படுத்தினர்.

இதனால் மோடி அரசு கடும் ஆத்திரமடைந்த பின்னணியில், கடந்த பிப்ரவரி 14 அன்று தில்லி மற்றும் மும்பையிலுள்ள ‘பிபிசி’ நிறு வனத்தின் இந்தியப் பிரிவு அலு வலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். “இது வருமான சோதனை அல்ல, கணக்கு ஆய்வு மட்டுமே” என்றும், “வருமான வரித்துறை இயக்குநர் உத்தரவின் அடிப்படையிலேயே பிபிசி துணை நிறுவனங்களின் சர்வதேச வரி விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆய்வை மேற்கொள்கிறோம்” என்றும் கூறிக்கொண்டே அலு வலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் கள், செல்போன்களை ஆய்வு செய்த  வருமான வரித்துறை அதிகாரிகள், சர்வதேச வரி விவகாரங்கள் தொடர் பாக சோதனைகள் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்தனர். இரவு பக லாக பிப்ரவரி 16 பின்னிரவு வரை மூன்று நாட்களுக்கு நீடித்த இந்த சோதனையில் பிபிசி ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப் களையும் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிபிசி மீதான வரு மான வரிச்சோதனை ஊடகச் சுதந்தி ரத்தின் மீதான தாக்குதல், விசார ணை அமைப்புக்களைக் கொண்டு மிரட்டும் முயற்சி என இந்திய பத்திரி கை ஆசிரியர்கள்  சங்கம்’ (Editors Guild of  India) துவங்கி ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ (Amnesty International) உள்ளிட்ட சர்வதேச  மனித உரிமை அமைப்புக்களும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பிபிசி-யை “உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு” என்று கூறிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “நீங்கள் (பிபிசி) மோடிக்கு எதிராக விஷத்தை கக்காத வரையில், ஒவ் வொரு அமைப்புக்கும் வாய்ப்பளி க்கும் நாடு இந்தியா” என்று பகிரங்க மாகவே மிரட்டல் விடுத்தார். 

பிபிசி-யின் பெயரைக் குறிப்பிடா மல் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய மும், “வருமான வரிச் சட்டம் 1961  பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்ப தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தில்லி, மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்த வில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படை யிலேயே தற்போது ‘பிபிசி இந்தியா’ நிறுவனம் மீது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்து உள்ளது. மேலும், பணப்பரிமாற்ற கணக்கு புத்தகங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி, வரி செலுத்திய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்கும்படியும் பிபிசி-யின் இந்தியப் பிரிவுக்கு அம லாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.