states

img

அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி

பீகாரில் அங்கன்வாடி ஊழியர் களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.5,000 வழங்கப்படும் நிலையில்,  ஊதிய உயர்வு, பணிக்கொடை வழங்கு வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் பாட்னாவில் செவ்வாயன்று சட்டப்  பேரவை முன் முற்றுகைப் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட் டவர்களை கலைந்து செல்ல போலீசார் “மைக்” மூலம் கூறினார். அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்து செல்ல மறுக்கவே போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி யடித்தும், தடியடி நடத்தியும் போராட்  டத்தை கலைத்தனர். தொழிலாளர் களுக்கு பணிக்கொடை பலன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பீகார் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட அங்கான்வாடி ஊழியர்கள் கூறினர்.