லக்னோ, பிப்.16- சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷை ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை பகவான் ராமரின் வம்சா வளி என்றும் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பிரிஜ் பூஷன் சரண் சிங், கைசர்கஞ்ச் மக்க ளவைத் தொகுதி எம்.பி.யாக இருக் கும் நிலையில், அவரது மகன் பிரதீக் பூஷன் சிங் கோண்டா சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த திங்கட்கிழமையன்று தனது மகன் பிரதீக் பூஷன் சிங்கை ஆதரித்து கோண்டா தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “அகிலேஷூம், ஓவைசி யும் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யைப் பெறுவதற்காக போராடு கிறார்கள். அகிலேஷ் ஒரு ஏமாற் றுக்காரர். அவர் தனது தந்தைக்கும், சித்தாப்பாவுக்கு துரோகம் செய்தார். ஏமாற்றுவதே அவரது வேலை. சுவாமி பிரசாத் மவுரியாவுக்கும், அகிலேஷ் யாதவ் துரோகம் செய்தார். மவுரியா 20-30 சீட்டுக்கள் வாக்குறுதி யுடன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஓவைசி என்னுடைய பழைய நண்பர். எனக்குத் தெரிந்தவரை அவர் முன்பு இந்து வாக இருந்தவர். அவர் ராமரின் வம்சா வளி, ஈரானை சேர்ந்தவர் அல்ல!” என்று பேசியுள்ளார்.