புதுதில்லி, ஜூன் 8- இந்திய ராணுவத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அக்னி வகை ஏவு கணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்னி 4 ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் திங்களன்று வெற்றி கரமாக சோதனை செய்யப்பட்டது. இது 4,000 கி.மீ. தொலைவு வரை பாயக்கூடியது. 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி வகை ஏவு கணைகள் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தா னின் எந்த பகுதி மீதும் இந்திய ராணுவத் தால் தாக்குதல் நடத்த முடியும்.