புதுதில்லி, ஜுன் 21 - இந்த ஆண்டிற்கான ‘காந்தி அமைதி விருதை’ பிரதமர் மோடி தலைமையிலான குழு கீதா அச்சகத்திற்கு வழங்கி இருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. உ.பி.மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகம் நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறை வடைந்த நிலையில், காந்தி அமைதி விருது வழங்கப்படுவதாகவும், காந்திய கொள்கை களை கடைப்பிடித்து அனைவரின் வாழ்விற்காக வும் கீதா பதிப்பகம் காந்திய வழியில் செயல் பட்டுள்ளது என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக வரலாற்றை திரித்து கூறியுள்ளார் பிரதமர் மோடி. 1920ல் நிறுவப்பட்டது கீதா பதிப்பகம். இதன் நிறுவனர்கள் ஜெய்தயாள் கோயந்த்கா மற்றும் அனுமன் பிரசாத் போத்தார் ஆகிய இரு வரும் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப் பட்டவர்கள். (காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்து மகா சபாவின் ஆண்டு பொதுக்குழு 1946ஆம் ஆண்டு கோரக்பூரில் நடந்த போது போத்தார் முக்கிய அமைப்பாளர் களில் ஒருவராகவே பணியாற்றினார்). இந்துத்துவ வாதி கோட்சே காந்தியை சுட்டுக்கொலைசெய்த 1948 வரை கீதா அச்சகம் காந்தியின் கொள்கை யில் முரண்பட்டு அவரை கடுமையாக விமர்சித்து வந்துள்ளதை அக்சய் முகுல் எழுதி தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ‘இந்து இந்தியா-கீதா பிரஸ்: அச்சும் மதமும்’ என்ற நூல் தெளிவாக விளக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கீதா அச்சகத்திற்குத் தான் தற்போது காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காந்தி அமைதி விருதானது 1995ல் மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த தினத்தன்று உருவாக்கப்பட்டது. சமூக, அர சியல், பொருளாதார மாற்றத்திற்காக காந்திய வழியில் அகிம்சையை கடைப்பிடித்து போராடுபவர்களை தேர்ந்தெடுத்து இவ்விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்விருதைப் பெறுவதற்கு இனம், மொழி, பாலினம் என்ற எந்த அடையாளங்களும் தடை இல்லை. இவ்விருதுக்கான தேர்வுக் குழுவில் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், இந்தியாவின் தலைமை நீதிபதி, இரண்டு முக்கியப் பிர முகர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். முக்கி யமான பிரமுகர்களிடமிருந்து இந்த விருதுக் கான பரிந்துரைகள் கோரி பெறப்பட்டு, அந்தப் பரிந்துரைகளில் இருந்தே விருதுக்கு உரி யவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தப் பரிந்துரைகளில் தகுதியானவர்கள் இல்லா விட்டால், அந்த ஆண்டு விருது வழங்கு வதை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் தேர்வுக் குழுவிற்கு உள்ளது. (2006-2012 வரை விருது வழங்காமல் நிறுத்தி வைக்கப் பட்டது). இதுவரை இந்த விருதை நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டூடு போன்ற சர்வதேச தலைவர்களும் கிராமீன் வங்கி, இஸ்ரோ போன்ற அமைப்புகளும் பெற்றுள்ளன.
ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இந்துத்துவத்தை தூக்கிப்பிடித்து வரும் பாஜக. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இவ்விரு தை ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து செயல்பட்டு வரும் விவேகானந்த கேந்திரா மற்றும் ஏகல் அபி யான் அறக்கட்டளைகளுக்கு வழங்கியது. அதை தொடர்ந்து தற்போது காந்தியின் கொள்கைகளுடன் முரண்பாட்டைக் கொண்டு, அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த கீதா பதிப்பகத்திற்கு இந்த விருது வழங்குவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி முன்னெடுத்து வந்த சமபந்தி விருந்தையும் தலித் மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டத்தையும் கீதா பதிப்பாக நிறு வனர்கள் கடுமையாக விமர்சித்து பத்திரிகை யில் எழுதி வந்தனர். குறிப்பாக பிரசாத் போத்தார் இதுகுறித்து கடுமையாக சாடி காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். காந்தியின் வழியில் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாமல் துவங்கப்பட்டு நூறாண்டு காலமாக லாபத்திற்காக தொடர் இந்துத்துவ சனாதனத்தை மட்டுமே பரப்பி வரும் கீதா பதிப்பகத்திற்கு மோடி அரசு காந்தி அமைதி விருதை வழங்குவது ஏற்புடையது அல்ல! மோடி அரசின் இந்த செயல் காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு விருது வழங்கு வதற்கு ஒப்பானது என்று காங்கிரஸ் கடுமை யாக விமர்சித்துள்ளது.