புதுதில்லி, ஆக. 7 - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக தொடர் கிறார் என, ஒருவழியாக மக்க ளவைச் செயலகம் திங்களன்று அதி காரப்பூர்வ அறிவிப்பை வெளி யிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 136 நாட்களுக்குப் பின், ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் சென்றதுடன், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் உற்சாகமான வரவேற்புக்கு இடையே, மக்களவை நடவடிக்கை களிலும் அவர் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலை யொட்டி ஏப்ரல் 13 அன்று, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி னார். அப்போது, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது?”- என்று அவர் பேசியது சர்ச்சையாக மாறியது. ராகுலின் பேச்சு, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன் னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 504-இன் கீழ், மார்ச் 23 அன்று ராகுல் காந்தியை குற்ற வாளி என அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
இவ்வாறு தண்டனை விதிக்கப் பட்ட உடனேயே, மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படி, ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியை இழந்து விட்டதாக, மார்ச் 24 அன்று அவசர அவசரமாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. அத்துடன், ‘எண்: 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா’வை ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறும் ராகுலுக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ராகுலும் ஏப்ரல் 14-ஆம் தேதியே அரசு பங்களாவைக் காலி செய்துவிட்டு வெளியேறினார். இந்நிலையில்தான், குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சூரத் நீதிமன்ற உத்த ரவை நிறுத்தி வைப்பதாக, உச்ச நீதி மன்றம், ஆகஸ்ட் 4 அன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவு, ராகுல் காந்தி எம்.பி.யாகவே தொடரும் நிலையை ஏற்படுத்தியது. எனினும், மக்களவைச் செயலகம் அறிவிப்பு எதையும் வெளி யிடவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராகுலை எம்.பி.யாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மக்களவைச் செயலருக்கும் முறைப்படி காங்கிரஸ் கடிதம் அனுப்பியது. ஆனால், குஜராத் நீதிமன்ற உத்தரவையொட்டி, முன்பு பதவி பறிப்பு நடவடிக்கையை மட்டும் 24 மணிநேரத்திற்குள் எடுத்த மக்கள வைச் செயலகம், தற்போது உச்ச நீதிமன்றமே தண்டனையை நிறுத்தி வைத்தும், அதன்மீது ஆகஸ்ட் 5, 6 என இரண்டு நாட்கள் கடந்த நிலை யிலும் அறிவிப்பு எதையும் வெளி யிடாமல் காலங்கடத்தி வந்தது. இதனைக் கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய காங்கிரஸ் கட்சி, திங்கட்கிழமைக்குள் உத்தரவு எதுவும் வெளியாகாவிட்டால், உச்ச நீதிமன்றத்திடம் முறையிடுவதென முடிவு செய்தது. ஆகஸ்ட் 8 அன்று துவங்கும், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்வதைத் தடுக்கவே, இந்த காலம் தாழ்த்தும் நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இவ்வாறு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலை யில், ஒருவழியாக, ராகுல் காந்தி யை எம்.பி.யாக அங்கீகரித்து, மக்க ளவைச் செயலகம் திங்களன்று காலை அறிவிக்கை வெளியிட்டது. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கேரளாவின் வயநாடு தொகுதி மக்க ளவை உறுப்பினராக இருந்துவந்த ராகுல் காந்தி, அந்த பதவியில் தொடர்ந்து செயல்படுவார். அவர் செயல்படு வதற்கு விதிக்கப்பட்டிருந்த தகுதி நீக்க உத்தரவு தற்போது நீக்கப்படுகிறது. அதன்படி இன்றிலிருந்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடரலாம்” என அந்த அறிவிக்கை யில் கூறப்பட்டது. இதனால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதுடன், அவர் உடனடியாக நாடாளுமன்ற நடவடிக்கை களிலும் பங்கேற்கும் சூழல் உருவானது. இது காங்கிரஸ் கட்சியினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மக்களவைச் செயலக அறிவிப்பின் நகலை காங்கிரஸ் கட்சி தனது சமூக லை தளத்தில் வெளியிட்டு, ‘வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தது.
மறுபுறத்தில், அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களும், ராகுலை வரவேற்க நாடாளுமன்ற வாயிலில் கூடினர். தான் எம்.பி.யாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, முற்பகல் 11.45 மணியளவில் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புடைசூழ சென்று காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 136 நாள் தடைக்குப் பின், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அவர், மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். முன்னதாக எம்.பி. பதவி பறிக்கப்பட்டபோது, ‘நாடாளு மன்ற உறுப்பினர்’ என இருந்த தனது டுவிட்டர் பயோ-வை, ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்’ என ராகுல் காந்தி மாற்றினார். தற்போது மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டுவிட்டர் பயோவில் மீண்டும் ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம், செவ் வாயன்று துவங்கவுள்ள நிலையில், ராகுல் காந்தி வழக்கம் போல தனது அதிரடியான உரையை ஆற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.