states

எதிர்க்கட்சிகளின் பாட்னா சங்கமம் ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு!

புதுதில்லி, ஜூன் 5 - பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக,  ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத  காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, இதுவரை காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இதனிடையே, மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி காரண மாக கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருப்ப தாகவும், கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்தால் பங்கேற்க வசதியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதல் வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ராகுல் காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருப்ப தால், வேறு ஒரு தேதியில் கூட்டத்தை நடத்துவது சரியாகத் தான் இருக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலை வர் மல்லிகார்ஜூன கார்கேவும் கூறியிருந்தார்.  இதனிடையே, அரங்கேறிய ஒடிசா ரயில் விபத்து கோரத்தால், நிர்ண யித்தபடி ஜூன் 12 அன்று கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்ற நிலை எழுந்தது. இதையடுத்து, ஜூன் 12 அன்று நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் மகா சங்கமம்,  ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.