மும்பை, ஏப்.16- மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில் மிரட்டல் விடுத்தி ருந்தார். “மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை மே 3-ஆம் தேதிக் குள் மூட வேண்டும், இல்லை யெனில் அனுமான் சாலிசாவை ஸ்பீக்கர்களில் இசைப்போம். இது சமூகப் பிரச்சனை; மதப் பிரச்சனை அல்ல. மாநில அரசிடம் நான் சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயத்தில் நாங்கள் பின் வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்” என்று ராஜ் தாக்கரே பேசியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், “முஸ்லிம் குடிசைகளில் உள்ள மதராசாக்களை சோதனையிட வேண்டும் என்று பிரதமர் மோடி யிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாகிஸ்தான் ஆதர வாளர்கள் இந்த குடிசைகளில் வசிக்கின்றனர்” என்றும் வெறுப் பைக் கக்கியிருந்தார். இந்நிலையில் ராஜ் தாக்கரே-வுக்கு அவரது மருமகன் உறவு முறை கொண்டவரும், மகா ராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்ச ரும், முதல்வர் உத்தவ் தாக்கரே-வின் மகனுமான ஆதித்யா தாக் கரே பதிலளித்துள்ளார். ராஜ் தாக்கரேவின் எச்சரிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குப் பதிலாக, ராஜ் தாக்கரே பணவீக்கம் அதிக ரிப்பதைப் பற்றிப் பேச வேண்டும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை கள் உயர்வதைப் பற்றிப் பேச வேண்டும். மேலும் 60 ஆண்டு களைத் திரும்பிப் பார்க்காமல், கடந்த இரண்டு மூன்று வரு டங்களில் என்ன நடந்தது? என்ப தைப் பற்றிப் பேச வேண்டும்” என பதிலடி கொடுத்துள்ளார்.