states

img

சரியான பாதையில் பயணிக்கும் ஆதித்யா எல்1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 2 அன்று ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து “ஆதித்யா எல் 1” விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த “ஆதித்யா எல் 1” விண்கலம் 4 மாதம் பயணித்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லாக்ராஞ்சியன் எல் 1 என்ற புள்ளியில் நிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில், “ஆதித்யா எல் 1” விண்கலம் சூரியனை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”லாக்ராஞ்சியன் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணி அக்., 6 அன்று 16 விநாடிகளில் வெற்றிகரமாக முடிந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.