புதுதில்லி, மே 3- பிரபல பாசுமதி அரிசி விற்பனை நிறுவன மான கோஹினூரை, அதானி வில்மர் நிறு வனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அன்றாட பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு (Fast-Moving Consumer Goods - FMCG) நிறு வனங்களில் ஒன்றாக ‘அதானி வில்மர்’ (Adani Wilmar Limited) உள்ளது. அண்மைக் காலங்களில், மக்கள் தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் பிரிவிலும் ‘அதானி வில்மர்’ தீவிர கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. ‘பார்சூன்’ என்ற பிராண்டட் பெயரில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், கடலை மாவு, சர்க்கரை, பட்டாணி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக இந்தியாவின் ஒட்டு மொத்த அரிசி வர்த்தகத்தையும் தனது ஆதிக்கத் தின் கீழ் கொண்டுவரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள ‘அதானி வில்மர்’, அதற்கேற்ப மாநில அளவிலான அரிசி பிராண்டுகளையும், ரைஸ் மில்களையும் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் திவாலான, இயங்க முடியாத சில ரைஸ் மில்களை ஏற்கெனவே அது கைப்பற்றி யிருக்கிறது.. பொது விநியோக உணவு தானியங்களைத் தாண்டி, மேற்கு வங்கத்தில், தினசரி மக்கள் பயன்படுத்தும் அரிசி ஆண்டுக்கு 30 முதல் 35 மில்லியன் டன்களாக உள்ளது. அந்த வகை யில், “இந்த வேகமாக வளரும் பிரிவில் வர்த்த கத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கு வங்கத்தில் சில ரைஸ் மில்களைக் கைப்பற்றி வர்த்தகத்தைத் துவங்க உள்ளோம்” என ‘அதானி வில்மர்’ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், பிரபல பாசுமதி அரிசி பிராண்டான கோஹினூர் (Kohinoor) நிறு வனத்தை அதானி வில்மர் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மெக் கார்மிக் (McCormick) நிறுவனத்திடம் இருந்து கோஹினூர் பிராண்டை அதானி வில்மர் வாங்கி யுள்ளது. கோஹினூர், சார்மினார், டிராபி ஆகிய மூன்று பிராண்டுகளும் ஏற்கெனவே ஒரு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில், இம்மூன்று பிராண்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் அதானி வில்மர் நிறுவனம் அரிசி வியாபாரத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. எனினும், எவ்வளவு தொகைக்கு கோஹி னூரை அதானி வில்மர் வாங்கியது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. கோஹி னூர் பிராண்டுக்கு கீழ் சார்மினார், டிராபி போன்ற பிராண்டுகளும் இயங்கி வரும் நிலையில், இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 115 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ‘அதானி வில்மர்’ ஏற்கெனவே, தனது பார்சூன் பிரிவின் கீழ் பாசுமதி அரிசி வர்த்தகத்தில் கால்பதித்து விட்டது குறிப்பி டத்தக்கது.