states

16-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

புதுதில்லி, பிப்.2- கடந்த ஜனவரி 25 மற்றும் பிப்ரவரி 2-க்கு இடை யிலான பங்குச் சந்தையின் 6 வேலைநாட்களில் மட்டும் அதானி குழுமம் சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதானி  குழுமங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 8  லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு சரிந்துள் ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 44 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதானி சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1  லட்சத்து 92 ஆயிரம் கோடி) அளவிற்கு கரைந்துள் ளது. இதன்மூலம் ‘போர்ப்ஸ்’ உலகப் பணக்கா ரர்கள் பட்டியலில் 64.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், அதானி 16-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். 

எப்பிஓ-வை கைவிட்ட அதானி

இதனிடையே, ரூ. 20,000 கோடி நிதி திரட்டுவ தற்காக பங்குகளை விற்க திட்டமிட்டிருந்த அதானி  எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதிலிருந்து திடீரென பின்வாங்கியுள்ளது. “பங்குச் சந்தையில் அறிவித்தி ருந்த ரூ. 20 ஆயிரம் கோடிக்கான ‘பாலோ ஆன்  பப்ளிக் ஆபர்’ (Follow-on Public Offer - FPO)-ஐ  திரும்பப் பெறுவதாகவும், பணத்தை முதலீடு  செய்திருந்த மக்களுக்கே அதனை திருப்பி வழங்கு வதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். தற்போ தைய சூழலில், எப்பிஓ-வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவெடுத்திருப்பதாகவும்; ஒரு தொழில்முனைவோராக தான் மேற்கொண்டு வரும் 40 ஆண்டுகால பயணத்தில் பங்குதாரர் களின் ஆதரவும் ஆசீர்வாதமும் தொடர்ந்து தனக்கு  கிடைத்து வருவதாகவும், அவர்களின் நலன்தான் தனக்கு முக்கியம் என்றும் மற்றதெல்லாம் இரண்டாம்  பட்சமே என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார். தான்  தனது வாழ்வில் சிறிய அளவிலாவது சாதித்திருந்தால் அதற்கு முதலீட்டாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கை தான் காரணம் அவர் ‘கண்ணீர்’ வடித்துள்ளார்.

விசாரணையில் இறங்கியது ஆர்பிஐ

ஆனால், அதானிக்கு அடிக்கு மேல் அடியாக, அதானி நிறுவனங்களுக்கு, கொடுத்த கடன் விவ ரங்களை இந்திய வங்கிகள் அறிக்கையாக அளிக்க  வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தர விட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது.    மேலும், அதானி குழுமத்தின் பங்கு பத்திரங்க ளுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. அது ஜீரோ வாகி விட்டது என சுவிட்சர்லாந்து நிதி மேலாண்மை நிறுவனம் ‘கிரெடிட் சுவிஸ்’ அறிவித்ததாக தகவல் வெளியான நிலையில், சிட்டி வங்கிக் குழுமம், அதானி குழும பங்கு பத்திரங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது.