states

‘ஊபர்’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை டாக்சி தொழிலிலும் இறங்குகிறார் அதானி

புதுதில்லி, அக்.27- இந்தியாவின் முதல்பெரும் பணக்காரரான கவுதம் அதானி, கால்  பதிக்காத தொழில்களே இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டி ருக்கிறது. அன்றாட பயன்பாட்டுப் பொருட்க ளான (Fast-Moving Consumer Goods - FMCG) அரிசி, கோதுமை மாவு, பருப்பு, கடலை மாவு, சர்க்  கரை, பட்டாணி, சமையல் எண்ணெய் போன்ற பலசரக்கு வியாபாரம் துவங்கி, சுரங்கம், மின்சாரம், எரி வாயு, விமான நிலையங்கள், துறை முகம், வேளாண் வர்த்தகம், சொகு சுக் கப்பல்கள் இயக்கம், வெடி மருந்து, சிறியரகத் துப்பாக்கித் தயா ரிப்புத் தொழிற்சாலை, சிமெண்ட் உற்பத்தி, செய்தி ஊடகம் என எதை யும் அதானி விட்டு வைப்பதாக இல்லை. இந்நிலையில்தான், அதானி தற்போது டாக்சி தொழிலிலும் இறங்கத் திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல்தர நகரங்களிலுள்ள விமான நிலையங்கள் பெரும்பாலும் அதானி யின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த விமான நிலையங்களுக்குத் தடையில்லாத போக்குவரத்து வசதி யை ஏற்படுத்துவதற்காக டாக்சி தொழி லையும் துவங்க அதானி முடிவு செய்  துள்ளார்.

மும்பை, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கவு காத்தி மற்றும் மங்களூரு ஆகிய விமான நிலையங்கள், அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான ‘அதானி  ஏர்போர்ட்ஸ்’-ஸின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இதுதவிர, விமானப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய மற்ற நிறுவனங்க ளிலும் அதானி குழுமம் முதலீடு செய்து வருகிறது. அக்டோபர் மாத  தொடக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிறுவனமான ‘ஏர் ஒர்க்ஸ்’ உடன் ரூ. 400 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் போட்டது.  அதற்கு முன்பு 2021-இல் மும்பையைச் சேர்ந்த பயண ரீடெய்ல்  நிறுவனமான பிளெமிங்கோவின் 74 சதவிகித பங்குகளை அதானி குழு மம் கையகப்படுத்தியது. இந்நிறுவ னம் ‘டியூட்டி ப்ரீ’ கடைகளை முக்கிய விமான நிலையங்களில் நடத்து கிறது. அதே போல் பிளிப்கார்ட் வசம் இருந்த ஆன்லைன் பயண ஏஜென்சி யான கிளியர் டிரிப்பில் 20 சதவிகித பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது அதானி விமான நிலையங்கள் அனைத்திலும் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதிசெய்கிறோம். என்று கூறி டாக்சி தொழிலிலும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆன்  லைன் டாக்சி புக்கிங் நிறுவனமான ஊபருடன் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளது.  விமான நிலையங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் வாடகை கார்களை அமர்த்துவதால், அத்தொழில் லாபகரமானதாக உள்ளது. அதன் மீதுதான் ‘அதானி ஏர்போர்ட்ஸ்’ தற்போது கண் வைத்  துள்ளது. விமான நிலையத்திலிருந்து பயணிகள் எங்கு செல்வதற்கும் போக்குவரத்து தொடர்பை ஏற்  படுத்தி தருவதன் மூலம் விமான நிலை யத் தொழிலும் வளர்ச்சி அடையும் என்று அதானி குழுமம் கணக்கு போடுகிறது. இதுதொடர்பாக, ஏற்கெ னவே ஊபருடன் கூட்டமைத்து 5 விமான நிலையங்களில் பிரத்யேக ‘ஊபர்’ பிக்அப் பகுதிகளையும் அதானி குழுமம் அமைத்துள்ளது.