பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு போனார் அதானி
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த ஜனவரி 25 அன்று 3-ஆவது இடத்திலிருந்து 8-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட கவுதம் அதானி, ஜனவரி 30 அன்று 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானியின் சொத்து மதிப்பு ரூ. 7 லட்சத்து 257 கோடியாக சரிந்துள்ளது.
புதுதில்லி, ஜன. 30 - ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) அமைப்பின் அறிக்கை வெளியாகி 3 வர்த்தக நாளில் மட்டும் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11.6 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதில், அதானி குழும பங்குகள் வாயிலாக மட்டும் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன் பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியான பின்பு மும்பை பங்குச் சந்தைகளில் உருவான தாக்கம் மூலம் தேசிய பங்குச் சந்தையில் பட்டி யலிடப்பட்ட அனைத்து பங்குகளின் சந்தை மூலதனம் மூன்று நாளில் 268.8 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கங்களை உருவாக்கவில்லை என்பதை ஹிண்டன் பர்க் அறிக்கையில் கூறியது மட்டும் அல்லாமல் அதிகப்படியான கடன், கணக்கியல் முறைகேடுகள் செய்த தாகத் தெரிவித்தது.
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, தேசிய பங்குச் சந்தைக் குறி யீடான நிப்டியின் வங்கி குறியீடு 2,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை பாதித்தது. இதற்கு முக்கியமான கார ணம் வங்கிகளும் அதானி குழு மத்திற்கு அதிகப்படியான கடனை கொடுத்துள்ளதுதான். வங்கி பங்குகள் திங்களன்று காலை அதிகமான சரிவை சந்தித்தாலும், மாலை வர்த்தகம் முடியும் போது சரிவில் இருந்து மீண்டன. ஆனால் ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி சரிவுடனே இருந்தன. ஹிண்டன்பர்க் அமைப்பின் அறிக்கை வெளியாகி 3 வர்த்தக நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்த நிலையில் அதானி பங்குகள் மூலதனம் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை இழந்துள்ளது. இந்தச் சரிவு மூலம் அதானி குழு மம் தனது மொத்த சந்தை மதிப்பீட்டில் நான்கில் ஒரு பங்கை இழந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 அதானி குழும பங்குகளில் அதானி எண்டர்பிரைசஸ் மட்டுமே உயர்வுடன் முடிந்தது. மற்ற அனைத்து நிறு வனங்களும் சரிவுடன் முடிந்தன. வர்த்தக வாரத்தின் துவக்க நாளான திங்களன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 169.51 புள்ளிகள் உயர்ந்து 59500.41 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 3 மாத குறைந்தபட்சத்தைத் தொட்டு மீண்டும் 17,648.95 புள்ளிகளை அடைந்தது.