states

img

சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மதபோதகர்கள் கைது!

ராய்ப்பூர், டிச. 24 - சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் மக்களை கிறி ஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததாக பங்குத்தந்தை மற்றும் 3 மதபோதகர்களை பூபேஷ் பாகேல் தலைமை யிலான அம்மாநில காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வரும் மாவட்டம் ஜாஷ்பூர். இங்கு பகிசா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பசியா எனும் கிராமத்தில், திலீப் நாகவன்ஷி என்பவரின் வீட்டில், கடந்த ஞாயிறு மற்றும்  திங்கட்கிழமைகளில் ‘குணப் படுத்துதல் கூட்டம்’ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், உள்ளூர் மொழியில் ‘சங்கய் சபா’ (changai sabha) என  அழைக்கப்படும்

அந்த ஜெபக் கூட்டத்தில், பங்குத்தந்தை அருண் குஜூர், பசந்த் லக்ரா, சால்மன் டிகா மற்றும் டினோ  குஜூர் ஆகிய மூன்று மதபோத கர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில்தான், இந்தக் கூட்டத்தில், உள்ளூர் பழங்குடி யின மக்கள் சிலரை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் முயற்சி கள் நடந்ததாக கூறி, ‘நாக் வன்ஷி சமாஜ்’ என்ற பழங்குடி யின பிரிவின் தலைவர் லக்கு ராமின் புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.  சத்தீஸ்கரில் அமலில் இருந்துவரும் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவுகளின் கீழும் பங்குத் தந்தை அருண் குஜூர் மற்றும் 3 மதபோதகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.